×

முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் வயிற்று வலி காரணமாக சென்னை ஆயிரம் விளக்கில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதி

சென்னை: முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் வயிற்று வலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் சென்னை ஆயிரம் விளக்கில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வயிற்று வலி காரணமாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே உள்ள அவ்வையார்குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் முன்னால் அமைச்சர் சிவி சண்முகம். இவர் தமிழக சட்டம் நீதிமன்றங்கள், சிறை துறைகள் மற்றும் கனிமவளத் துறை அமைச்சராக இருந்துள்ளார். தற்போது விழுப்புரம் மாவட்ட அதிமுக செயலாளராக உள்ளார். ஏப்ரல் மாதம் நடைபெற்று முடிந்த சட்டமன்ற தேர்தலில் விழுப்புரம் தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். 
சில நாட்கள் முன்பு முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் வி கே சசிகலா குறித்து ஊடகங்களில் சில கருத்துக்களை தெரிவித்து இருந்தார். இதையடுத்து சசிகலாவின் ஆதரவாளர்கள், சிவி சண்முகம் குறித்து செல்போன் மற்றும் சமூக ஊடகங்கள் மூலம் ஆபாசமாகவும், அநாகரிகமாக பேசியும், பதிவிட்டு வருகின்றனர். மேலும், செல்போனில் சிவி சண்முகத்தை அச்சுறுத்தும் வகையில் 500 பேர் கொலை மிரட்டல் விடுத்து வருவதாக, அவர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்நிலையில், முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் வயிற்று வலி காரணமாக சென்னை ஆயிரம் விளக்கில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

The post முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் வயிற்று வலி காரணமாக சென்னை ஆயிரம் விளக்கில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதி appeared first on Dinakaran.

Tags : Former Minister ,C. CV ,Chennai ,Thousand Lamp, ,C. CV Sangmukam ,Former ,-Minister ,C. CV Shanmukam ,Minister ,C. ,
× RELATED முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கருக்கு நிபந்தனை ஜாமீன்