×

காதல் மனைவியை கொன்று கொரோனாவால் இறந்ததாக நாடகம்: கைதான கணவன் ‘பகீர்’

திருமலை: ஆந்திர மாநிலம் கடப்பாவை சேர்ந்தவர் காந்த். சித்தூர் மாவட்டம் புங்கனூர் அடுத்த ராமசமுத்திரத்தை சேர்ந்தவர் புவனேஸ்வரி. இருவரும் பேஸ்புக் மூலம் அறிமுகமாகி காதல் திருமணம் செய்துகொண்டனர். இவர்களுக்கு ஒன்றரை வயதில் குழந்தை உள்ளது. கடந்த மார்ச் மாதம் காந்த், தனது மனைவி மற்றும் குழந்தையுடன் திருப்பதிக்கு வந்து அங்கேயே வசிக்க தொடங்கினார். சில நாட்களுக்கு முன்பு காந்த், தனது குழந்தையுடன்  மாமியார் வீட்டில் சென்றார். அப்போது அவர்களது மாமியார் புவனேஸ்வரி வரவில்லையா? என கேட்டார். அப்போது, ‘உங்கள் மகள் டெல்டா பிளஸ் கொரோனா தொற்று ஏற்பட்டு உயிரிழந்து விட்டார். சடலத்தைக்கூட கொடுக்காமல் மருத்துவமனை நிர்வாகமே இறுதிச்சடங்கு செய்துவிட்டது’ என தெரிவித்தார்.  இதனால் சந்தேகமடைந்த புவனேஸ்வரியின் பெற்றோர் திருப்பதி போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்ததில் காந்த், தனது மனைவியை கொன்று சடலத்தை பெரிய சூட்கேஸில் கொண்டுசென்ற காட்சிகள் அங்கிருந்த சிசிடிவி கேமராக்களில் பதிவாகி இருந்தது தெரிந்தது. இதையடுத்து போலீசார் காந்திடம் கிடுக்கிபிடி விசாரணை மேற்கொண்டனர். அப்போது அவர் அளித்த வாக்குமூலம் என போலீசார் கூறியதாவது : கடந்த மாதம் 21ம் தேதி காந்த், மனைவியிடம் வரதட்சணை கேட்டு தகராறு செய்துள்ளார். அப்போது, புவனேஸ்வரி நீ வேலைக்கு சென்று பணம் சம்பாதித்து வா என கூறியுள்ளார். இதில், ஆத்திரமடைந்த காந்த், புவனேஸ்வரியை தலையணையால் முகத்தில் அழுத்தி கொலை செய்துள்ளார். பின்னர் சூட்கேசில் சடலத்தை வைத்து அரசு மருத்துவமனை அருகே கொண்டு சென்று தீ வைத்து எரித்துள்ளார். இவ்வாறு வாக்குமூலம் அளித்ததாக போலீசார் தெரிவித்தனர். இதையடுத்து போலீசார் காந்தை கைது செய்து சிறையில் அடைத்தனர். காந்த் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளிநாட்டு வாழ் இந்தியரிடம் ₹35 லட்சம் மோசடி செய்து சிறைக்கு ஜாமீனில் திரும்பியது குறிப்பிடத்தக்கது. …

The post காதல் மனைவியை கொன்று கொரோனாவால் இறந்ததாக நாடகம்: கைதான கணவன் ‘பகீர்’ appeared first on Dinakaran.

Tags : Thirumalai ,Kanth ,AP ,Kappa ,Chittoor District ,Punkanur ,Ramasamudra, Bhuvaneswari ,Facebook ,
× RELATED விஜயவாடா நகரில் தாய், மனைவி 2 பிள்ளைகளை...