ஆர்.கே. இன்டர்நேஷனல் இன்கார்பரேட் சார்பில் ராமகிருஷ்ணன் தயாரிக்கும் படம் கலியுகம். ப்ரமோத் சுந்தர் இயக்கி வருகிறார். இதில் ஷ்ரத்தா ஸ்ரீநாத் சோலோ ஹீரோயினாக நடிக்கிறார். மாறா, சக்கரா படங்களுக்கு பிறகு இவர் நடிக்கும் படம் இது. கிஷோர் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். கே ராம்சரண் ஒளிப்பதிவு செய்கிறார். படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு நிறைவு பெற்றிருக்கிறது.
இதுகுறித்து படத்தின் இயக்குனர் ப்ரமோத் சுந்தர் கூறியதாவது : போஸ்ட் அபோகாலிப்டிக் எனப்படும் இறுதி பேரழிவிற்கு பின்னரான திரில்லர் ஜானரில் தயாராகி வரும் படம். ஏராளமான கிராபிக்ஸ் காட்சிகளுடன் தயாராகி வருகிறது. ஷ்ரத்தா ஸ்ரீநாத்தின் கேரியரில் முக்கியமான படமாக இருக்கும். என்றார்.