×

பொங்கலுக்குள் புதிய பேருந்து நிலையத்தை திறக்க நடவடிக்கை: கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் அமைச்சர்கள் ஆய்வு

சென்னை: பொங்கலுக்குள் புதிய பேருந்து நிலையத்தை திறக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அமைச்சர்கள் தெரிவித்துள்ளனர். கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் அமைச்சர்கள் ஆய்வு செய்தனர். கிளாம்பாக்கத்தில் நடைபெற்று வரும் புதிய ஒருங்கிணைந்த பேருந்து நிலைய பணிகளை அமைச்சர்கள் சேகர்பாபு, தா.மோ. அன்பரசன் ஆய்வு செய்தனர். இந்நிலையில் அமைச்சர் சேகர்பாபு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், பெருகிவரும் மக்கள் தொகைக்கு ஏற்ப பல பேருந்து நிலையங்கள் இருந்தால்தால் நெரிசல் குறையும்.சென்னை வண்டலூர் அருகே கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் 88 ஏக்கரில் ரூ.393.74 கோடி மதிப்பிட்டில் பணிகள் நடந்து வருகிறது. பேருந்து நிலைய பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கும், ஒப்பந்ததாரர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. விரைவாக கிளாம்பாக்க பேருந்து நிலைய பணிகளை முடிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. சென்னைக்கு இன்னும் 2 பேருந்து நிலையங்கள் தேவைப்படுகின்றன. கிளாம்பாக்கம் பேருந்து நிலைய பணிகளை பொங்கலுக்குள் முடிக்க முயற்சி செய்வோம் என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்….

The post பொங்கலுக்குள் புதிய பேருந்து நிலையத்தை திறக்க நடவடிக்கை: கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் அமைச்சர்கள் ஆய்வு appeared first on Dinakaran.

Tags : Pongkal ,Klambakkam bus station ,Chennai ,Pongal ,Dinakaran ,
× RELATED சென்னை ரெட்டேரி அருகே புத்தகரத்தில்...