சென்னை: நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் அயலான் படத்தை வெளியிட இடைக்கால தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பட நிறுவனம் பெற்ற ரூ.5 கோடி கடனை வட்டியோடு திருப்பி செலுத்தும் வரை படத்தை வெளியிட தடை கோரி வழக்கு தொடரப்பட்டது. அயலான் படத்தை வெளியிட வரும் 3-ம் தேதி வரை இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ளது.