×

மீண்டும் மனீஷா யாதவ்

சிலந்தி, ரணதந்த்ரா, அருவா சண்ட படங்களை இயக்கிய ஆதிராஜன்  இயக்கும் படம் நினைவெல்லாம் நீயடா. இளையராஜா இசை அமைக்கிறார். இதில் கதாநாயகனாக பிரஜன் நடிக்கிறார். கதாநாயகியாக மனீஷா யாதவ் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.  இவர் வழக்கு எண் 18 /9 படத்தில் அறிமுகமாகி ஆதலால் காதல் செய்வீர், திரிஷா இல்லனா நயன்தாரா, சண்டி முனி, ஒரு குப்பை கதை ஆகிய படங்களில் நடித்தவர். சென்னை 28 இரண்டாம் பாகத்தில் ஒரு பாடலுக்கு ஆடினார்.  கடைசியாக சண்டிமுனி என்ற படத்தில் நடித்திருந்தார். சமீபத்தில் திருமணம் செய்து கொண்ட இவர் சிறிய இடைவெளிக்கு பிறகு மீண்டும் நடிக்கிறார்.
 படத்தில் நடிப்பது குறித்து நடிகை மனீஷா யாதவ் கூறியதாவது:  வழக்கு எண்18/9, ஒரு குப்பை கதை போன்ற படங்கள் ரசிகர்களிடம் எனக்கு ஒரு அங்கீகாரத்தை பெற்றுத் தந்தன. அந்த வரிசையில் இந்த படம் என் நடிப்புத் திறமைக்கும் நடன திறமைக்கும் தீனி போடும் படமாக அமைந்திருக்கிறது. இந்த படத்தின் கதையை இயக்குனர்   சொன்ன உடனேயே பிடித்து விட்டது. அதற்கு காரணம், ஒரே கேரக்டருக்குள் பலவிதமான  கேரக்டர்கள் ஒளிந்திருக்கும்  வித்தியாசமான வேடம் இது. இதுவரை இப்படி ஒரு அழுத்தமான கதாபாத்திரத்தில் நான் நடித்ததில்லை. நிஜமாகவே எனக்கு சவாலான வேடம் இது.

Tags : Manisha Yadav ,
× RELATED பழைய காதலியை சந்திக்கவே கூடாது: சொல்கிறார் பேரரசு