×

மகனின் ஒலிம்பிக் கனவுக்காக துபாயில் குடியேறிய மாதவன்

சென்னை: மகனின் ஒலிம்பிக் கனவு நிறைவேற நடிகர் மாதவன் துபாயில் குடியேறி உள்ளார். பிரபல நடிகர் மாதவனின் மகன் வேதாந்த். நீச்சல் வீரரான அவர் தேசிய மற்றும் சர்வதேச போட்டிகளில் பல பதங்கங்களை வென்றுள்ளார். சமீபத்தில் பெங்களூருவில் நடைபெற்ற தேசிய ஜூனியர் நீச்சல் போட்டியில் 7 பதக்கங்களை வென்றார். இவர் 2026ல் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டிக்கு இந்தியாவின் சார்பில் நீச்சல் போட்டியில் கலந்து கொள்ள தயாராகி வருகிறார். 

மகனின் ஒலிம்பிக் கனவை நிறைவேற்ற மாதவன் சென்னையில் இருந்து துபாய்க்கு குடிபெயர்ந்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது: கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக மும்பையில் உள்ள பெரிய நீச்சல் குளங்கள் மூடப்பட்டுள்ளன. நானும், எனது மனைவியும் மகன் வேதாந்துடன் துபாயில் இருக்கிறோம். இங்கு வேதாந்தால் சிறந்த நீச்சல் குளங்களில் பயிற்சி பெற முடிகிறது.

 வேதாந்த் தனது ஒலிம்பிக் போட்டிக்காக தயாராகி வருகிறார். அவருக்கு தேவையான உதவிகளை நானும், எனது மனைவி சரிதாவும் செய்து வருகிறோம். உலக அளவில் நடந்த நீச்சல் போட்டிகளில் பதக்கங்களை குவித்து, வேதாந்த் எனக்கு பெருமை தேடித் தந்துள்ளார். அவர் சினிமாவில் நடிப்பதை நானும், எனது மனைவியும் விரும்பவில்லை. என்கிறார்.

Tags : Madhavan ,Dubai ,Olympic ,
× RELATED கனமழையால் ஐக்கிய அரபு அமீரகத்தில்...