- மிசோரம் அமைச்சர்
- அய்சால்
- மிசோரம் கலால்
- போதைப்பொருள் கட்டுப்பாட்டு பிரிவு
- அமைச்சர்
- பைச்சுவா
- மிசோரம்…
- மிசோரம்
- தின மலர்
ஐஸ்வால்: மிசோரம் மாநில கலால் மற்றும் போதைப்பொருள் தடுப்புப்பிரிவுத்துறை அமைச்சர் பெய்ச்சுவா தனது பதவியை திடீரென ராஜினாமா செய்தார். மிசோரம் மாநிலத்தில் மிசோ தேசிய முன்னணி ஆட்சி நடந்து வருகிறது. முதல்வராக ஜோரம்தங்கா உள்ளார். அங்கு அடுத்த ஆண்டு பிற்பகுதியில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இந்த நிலையில் கலால், போதைப்பொருள் தடுப்புபிரிவுத்துறை அமைச்சர் பெய்ச்சுவா தனது ராஜினாமா செய்தார். தனது ராஜினாமா கடிதத்தை முதல்வர் ஜோரம்தங்காவிடம் சமர்ப்பித்த பிறகு செய்தியாளர்களிடம் பெய்ச்சுவா கூறியதாவது: முதல்வர் ஜோரம்தங்கா, அமைச்சரவையை மாற்றியமைக்க விரும்பியதால் ராஜினாமா செய்யுமாறு என்னிடம் கூறினார். எனவே ராஜினாமா செய்தேன். ஆனால் சட்டமன்ற உறுப்பினராக நீடிப்பேன். எனது தொகுதி மக்களின் விருப்பப்படி வேறு கட்சியில் சேர்வது குறித்து முடிவு செய்வேன். இவ்வாறு அவர் கூறினார்….
The post மிசோரம் அமைச்சர் ராஜினாமா appeared first on Dinakaran.