×

செய்யாறு அருகே பொதுமக்கள் தவிப்பு ஏரி நீரில் மூழ்கிய பாராசூர்- நெல்வாய் சாலை: உடனடியாக சீரமைக்க கோரிக்கை

செய்யாறு: செய்யாறு அருகே பாராசூர்- நெல்வாய் சாலையானது ஒன்றரை கி.மீ. தூரத்திற்கு ஏரி நீரில் மூழ்கியுள்ளது. இதனால், போக்குவரத்து துண்டித்து பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு ஒன்றியம், பாராசூர் கிராமத்தில் இருந்து நெல்வாய் கிராமத்திற்கு செல்லும் சாலையில்  அமைந்துள்ளது பாராசூர் பள்ள காலனி. இங்குள்ள 250 குடும்பங்களில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இவர்கள் பல்வேறு தேவைகளுக்கு பாராசூர் கிராமத்தையே நம்பியுள்ளனர்.தற்போது ஏற்பட்டுள்ள மாண்டஸ் புயல் காரணமாக, பாராசூர்- நெல்வாய் சாலையில் உள்ள சித்தேரி நிரம்பி அதன் நீரானது அங்குள்ள சாலையை ஒன்றரை கி.மீ. தூரத்திற்கு மூழ்கடித்துள்ளது. அருகே உள்ள மேட்டுப்பாங்கான நிலங்களில் இருந்தும் தண்ணீர் வழிந்து ஏரி நீருடன் கலந்து தேங்கி நிற்கிறது. இதனால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் கடந்த ஒருவாரமாக இடுப்பளவு தண்ணீரில் கடந்து செல்லும் நிலைக்கு அப்பகுதி மக்கள் தள்ளப்பட்டுள்ளனர். மேலும், பள்ளி செல்லும் மாணவர்கள், முதியவர்கள், பெண்கள் உள்ளிட்டோர் கடும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். ஒவ்வொரு பருவ மழையின்போதும் பல்வேறு இன்னல்களை இப்பகுதி மக்கள் சந்தித்து வருகின்றனர். இதுகுறித்து ஊராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அதிகாரிகளுக்கு மனுக்கள் அனுப்பியும் பலன் ஏற்படவில்லை என பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். எனவே, மாவட்ட நிர்வாகம் இதில் தலையிட்டு, பாராசூர்- நெல்வாய் சாலையில் தண்ணீர் தேங்காதபடி சாலை உயர்த்தியும், இருபுறமும் தடுப்புச்சுவர் அமைக்கவும் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்….

The post செய்யாறு அருகே பொதுமக்கள் தவிப்பு ஏரி நீரில் மூழ்கிய பாராசூர்- நெல்வாய் சாலை: உடனடியாக சீரமைக்க கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Parasur- Nelwai road ,Thaippu Lake ,Seiyaru ,Seyyar ,Parasur-Nelwai road ,Dinakaran ,
× RELATED அரசு பஸ் கண்டக்டர் மண்டை உடைப்பு...