×

அரசியல்வாதியாக இல்லாமல் ஆளுநராகவே செயல்படுகிறேன்: தெலங்கானா கவர்னர் தமிழிசை பேட்டி

நெல்லை: கன்னியாகுமரி மாவட்டத்தில் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்ற  தெலங்கானா கவர்னர் தமிழிசை சவுந்தர்ராஜன்  நெல்லை அரசு விருந்தினர் மாளிகை வந்தார். அப்போது அவரை நெல்லை கலெக்டர் விஷ்ணு, துணை கமிஷனர் சீனிவாசன் உள்ளிட்டோர் வரவேற்றனர். ஆயுதப்படை போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்ட பின் அவர் கூறுகையில், இந்தியாவில் ஜி-20 மாநாடு 200 இடங்களில் நடக்கிறது. புதுவையில் பிளாஸ்டிக் முழுமையாக தடை செய்யப்பட்டுள்ளது. மனக்குள விநாயகர் கோயிலுக்கு அனைத்து தரப்பினரின் ஆலோசனைக்கு பின் யானை வாங்குவது குறித்து முடிவு எடுக்கப்படும். புதுவை அரசுடன் எனக்கு பிணக்கு இல்லை. இணக்கமாகவே இருந்து வருகிறேன். என்னை அரசியல்வாதியாக பார்க்கின்றனர். ஆனால் நான் ஆளுநராகவே பணி செய்து வருகிறேன், என்றார்….

The post அரசியல்வாதியாக இல்லாமல் ஆளுநராகவே செயல்படுகிறேன்: தெலங்கானா கவர்னர் தமிழிசை பேட்டி appeared first on Dinakaran.

Tags : Telangana Governor Tamilisai ,Nellai ,Telangana Governor ,Tamilisai Soundarrajan ,Kanyakumari district ,Nellai Government Guest House.… ,
× RELATED நெல்லையில் அரசு பேருந்து ஓட்டுநர்,...