×

கலைஞர் நகர்புற மேம்பாட்டு திட்டத்தில் திருவாரூர் நகராட்சி சோமசுந்தரம் பூங்கா புனரமைக்கும் பணி

*குழந்தைகளுக்கான விளையாட்டு உபகரணங்கள்*நடைபயிற்சிக்காக 4 புறமும் நடைமேடைகள்திருவாரூர் : திருவாரூர் நகரில் இருந்து வரும் நகராட்சியின் சோமசுந்தரம் பூங்கா கலைஞர் நகர்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.41 லட்சம் மதிப்பில் புனரமைக்கும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.திருவாரூர் நகராட்சி பகுதியில் 30 வார்டுகள் உள்ளது. கடந்த 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 55 ஆயிரம் மக்கள் வசித்து வருகின்றனர். இதுமட்டுமின்றி மாவட்ட தலைநகராக இருந்து வருவதன் காரணமாக இங்குள்ள பல்வேறு அலுவலகங்களுக்கு வருபவர்கள், மத்திய பல்கலைகழகம் உட்பட பல்வேறு கல்வி நிறுவனங்களுக்கு வந்து செல்லும் மாணவ, மாணவிகள் என நாள் ஒன்றுக்கு ஒரு லட்சத்திற்கும் மேற்ப்பட்டவர்கள் இந்த நகரை பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் நகரின் மையபகுதியான பனகல் சாலையில் நகராட்சியின் சோமசுந்தரம் பூங்கா ஒன்று இருந்து வருகிறது. மாலை நேரங்களில் பொழுது போக்கும் ஒரே இடமாக இருந்து வந்த இந்த பூங்காவானது கடந்த அதிமுக ஆட்சியில் 10 ஆண்டு காலத்தில் எவ்வித பராமரிப்பும் செய்யப்படாமல் பூங்கா முழுவதும் புல் வெளிகள் மண்டியவண்ணம் இருந்து வந்தது. மேலும் இந்த பூங்காவின் உள்ளே மனுநீதி சோழன் மணிமண்டபமும் இருந்து வருகிறது. மேலும் தற்போது சர்க்கரை நோய் உள்ளிட்ட பல்வேறு நோய்கள் காரணமாக நடைபயிற்சிக்கு செல்பவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் நகரில் வாகன போக்குவரத்தும் இரவு, பகலாக இருந்து வருவதன் காரணமாக நடைபயிற்சிக்கு செல்வோர் விபத்துகளிலிருந்து தங்களை பாதுகாத்துகொள்ள இந்த பூங்கா சீரமைக்கப்படும் பட்சத்தில் இந்த பூங்காவானது நடைபயிற்சிக்கு பயன்படும் என்பதால் பள்ளி குழந்தைகள் பொழுதுபோக்கு மற்றும் பொது மக்கள் நலன் கருதி இதனை உடனடியாக சீரமைத்து பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும் என்பதுடன் குழந்தைகளுக்கான பொழுதுபோக்கு சாதனங்களையும் அமைத்து தரவேண்டும் என நகராட்சி நிர்வாகத்திற்கு பொது மக்களும், சமூக ஆர்வலர்களும் விடுத்த கோரிக்கை குறித்து கடந்த மே மாதம் 18ம் தேதி தினகரனில் படத்துடன் செய்தி வெளியிடப்பட்டது.இதற்கிடையே தமிழகத்தில் கடந்தாண்டு மே மாதம் திமுக தலைமையிலான அரசு பொறுப்பேற்ற பின்னர் மாநகராட்சி மற்றும் நகராட்சி பகுதிகளில் கலைஞர் நகர் புற மேம்பாட்டு திட்டம் என்ற பெயரில் பல்வேறு பணிகள் நடைபெற்று வருகின்றன. இதனையொட்டி திருவாரூர் மாவட்டம் மட்டுமின்றி மாநிலம் முழுவதும் இந்த கலைஞர் நகர் புற மேம்பாட்டு திட்டத்தில் 2021- 22ம் நிதியாண்டில் ரூ 2 ஆயிரம் கோடி அளவிற்கு பணிகள் நடைபெற்று வருகின்றன.அதன்படி திருவாரூர் நகராட்சி பகுதியில் சாலைகள், மழை நீர் வடிகால் உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடந்து வரும் நிலையில் பிடாரி கோவில் தெருவில் இருந்து வரும் குளம், வாசன் நகர் மற்றும் ஐ.பி கோயில் குளங்களும் தூர்வாரப்பட்டு 4 கரைகளிலும் நடை பாதைகள் அமைக்கப்பட்டு குழந்தைகள் விளையாடும் விளையாட்டு சாதனங்கள் மற்றும் மின்விளக்கு வசதியுடன் அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன. இதுமட்டுமின்றி இந்த கலைஞர் நகர் புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் தெற்கு வீதியில் ரூ ஒரு கோடியே 97 லட்சம் மதிப்பில் அறிவுசார் மையம் ஒன்று அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.இந்நிலையில் இந்த நகராட்சியின் சோமசுந்தரம் பூங்காவானது தற்போது கலைஞர் நகர்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ. 41 லட்சத்து 40 ஆயிரம் மதிப்பில் புனரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. அதன்படி, இந்த பூங்காவில் குழந்தைகளுக்கான விளையாட்டு உபகரணங்கள், நடைபயிற்சிக்காக 4 புறமும் நடைமேடைகள், மழைநீர் வடிகால்கள் மற்றும் பாதுகாவலர் அறை உள்ளிட்ட பல்வேறு புனரமைப்பு பணிகள் நடைபெற்று வரும் நிலையில் இதற்கு தமிழக அரசுக்கும், நகராட்சி நிர்வாகத்திற்கும் பொது மக்கள் நன்றியும், பாராட்டும் தெரிவித்துள்ளனர்….

The post கலைஞர் நகர்புற மேம்பாட்டு திட்டத்தில் திருவாரூர் நகராட்சி சோமசுந்தரம் பூங்கா புனரமைக்கும் பணி appeared first on Dinakaran.

Tags : Thiruvarur Municipality ,Somasundaram Park ,Thiruvarur ,Dinakaran ,
× RELATED 6,417 மாணவர்கள் புதிதாக சேர்க்கை: மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தகவல்