×

கல்விச் சுற்றுலாவுக்கு அழைத்து சென்று மாணவியை பலாத்காரம் செய்த தலைமையாசிரியர்: உணவில் போதை பொருள் கொடுத்து அட்டூழியம்

மீரட்: உத்தரபிரதேசத்தில் மாணவியை கல்விச் சுற்றுலாவுக்கு அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்த தலைமையாசிரியர் மீது போக்சோ வழக்கில் போலீசார் வழக்கு பதிந்து தேடி வருகின்றனர். உத்தரபிரதேச மாநிலம் மீரட் பகுதியில் உள்ள கிராமப்புற அரசுப் பள்ளியின் தலைமையாசிரியர் (40), 9 மாணவ, மாணவிகளை அழைத்துக் கொண்டு கல்விச் சுற்றுலா சென்றார். அப்போது 17 வயது மாணவியான 10ம் வகுப்பு மாணவி ஒருவருக்கு போதைப் பொருள் கலந்து உணவை கொடுத்தார். அதை சாப்பிட்ட மாணவி, அடுத்த சில நிமிடங்களில் மயக்கமடைந்தார். தொடர்ந்து அந்த மாணவியை தலைமையாசிரியர் பாலியல் பலாத்காரம் செய்தார். சுயநினைவு வந்தவுடன், அந்த மாணவி தலைமையாசிரியரிடம் சண்டையிட்டார். அதற்கு அவர், நடந்த சம்பவத்தை வெளியே சொன்னால் தேர்வில் தோல்வியடைய செய்து விடுவதாகவும், மீறினால் கொலை செய்து விடுவதாகவும் மிரட்டியுள்ளார். அதிர்ச்சியடைந்த மாணவி கல்விச் சுற்றுலாவை முடித்துக் கொண்டு வீடு திரும்பினார். வீட்டில் சோகமாக இருந்த மாணவியை, அவரது பெற்றோர் துருவி துருவி விசாரணை நடத்தியதில் தலைமையாசிரியரால் தனக்கு நேர்ந்த கொடுமையை எடுத்து கூறினார். அதிர்ச்சியடைந்த பெற்றோர், மீரட் போலீசில் புகார் அளித்தனர். இதுகுறித்து போலீஸ் சூப்பிரண்டு ரோஹித் சிங் சஜ்வான் கூறுகையில், ‘மாணவியின் தந்தை அளித்த புகாரின் அடிப்படையில், தலைமை ஆசிரியருக்கு எதிராக போக்சோ உள்ளிட்ட சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது. கல்விச் சுற்றுலாவிற்கு அழைத்து செல்லப்பட்ட விருந்தாவனத்தில் பதுங்கியிருந்த தலைமையாசிரியரை போலீசார் சுற்றிவளைத்தனர். ஆனால் அங்கிருந்து அவர் தப்பிவிட்டார். தொடர்ந்து அவரை தேடி வருகிறோம்’ என்றார்….

The post கல்விச் சுற்றுலாவுக்கு அழைத்து சென்று மாணவியை பலாத்காரம் செய்த தலைமையாசிரியர்: உணவில் போதை பொருள் கொடுத்து அட்டூழியம் appeared first on Dinakaran.

Tags : Meerut ,Boxo ,Uttar Pradesh ,
× RELATED பிரபல கல்வி நிறுவனங்களின் நுழைவுத்...