×

குடும்ப தகராறில் தூக்கிட்டு தற்கொலை செய்த கணவரின் உடலை பார்த்து மயங்கி விழுந்த மனைவியும் சாவு: புதுகை அருகே சோகம்

புதுக்கோட்டை: கீரனூர் அருகே குடும்ப தகராறில் தற்கொலை செய்த கணவரின் உடலை பார்த்து கதறி அழுது மயங்கி விழுந்த மனைவியும் இறந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் அடுத்த துவரவயலை சேர்ந்தவர் திருநாவுக்கரசு (31). இவரது மனைவி வினிதா (25). 3 ஆண்டுகளுக்கு முன் திருமணமானது. இவர்களுக்கு 2 வயதில் ஒரு மகள், 7 மாதத்தில் ஒரு மகன் உள்ளனர். குடும்ப தகராறு காரணமாக நேற்று முன்தினம் இரவு திருநாவுக்கரசு வீட்டில் தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்றார். இதைபார்த்து அதிர்ச்சியடைந்த உறவினர்கள் திருநாவுக்கரசை மீட்டு புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி திருநாவுக்கரசு நேற்று இறந்தார்.பிரேத பரிசோதனைக்கு பின்னர் திருநாவுக்கரசுவின் உடல் நேற்று மாலை வீட்டுக்கு கொண்டு வரப்பட்டது. ஊர் முச்சந்தியில் உடலை இறக்கி வைத்தபோது திருநாவுக்கரசின் மனைவி வினிதா மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர். அப்போது வினிதா திடீரென மயங்கி விழுந்தார். உடனே அவரை  கீரனூர் அரசு மருத்துவமனைக்கு தூக்கி சென்றனர். பரிசோதனை செய்த டாக்டர்கள், வினிதா ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இறந்த கணவரின் உடலை பார்த்து கதறி அழுத மனைவியும் மயங்கி விழுந்து இறந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து கீரனூர் போலீசார் விசாரிக்கின்றனர்….

The post குடும்ப தகராறில் தூக்கிட்டு தற்கொலை செய்த கணவரின் உடலை பார்த்து மயங்கி விழுந்த மனைவியும் சாவு: புதுகை அருகே சோகம் appeared first on Dinakaran.

Tags : Pudugai ,Pudukottai ,Kiranur ,
× RELATED கடன் தொல்லையால் விபரீத முடிவு...