×

வீட்டின் பின்புறம் கஞ்சா செடி வளர்த்த முதியவர் மீது வழக்கு

சின்னசேலம்: கச்சிராயபாளையம் அருகே வீட்டின் பின்புறம் கஞ்சா செடி வளர்த்த முதியவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து தேடி வருகின்றனர். கள்ளக்குறிச்சி மாவட்டம் கச்சிராயபாளையம் அருகே பால்ராம்பட்டு வடக்கு காட்டுகொட்டாய் பகுதியை சேர்ந்தவர் கண்ணுசாமி(67). இவர் தனது வீட்டின் பின்புறம் தண்ணீர் தொட்டி அருகில் சுமார் 6 அடி உயரமுள்ள கஞ்சா செடி வளர்த்து வந்துள்ளார். இதுகுறித்த ரகசிய தகவல் கச்சிராயபாளையம் போலீசாருக்கு தெரிந்தது.இதையடுத்து இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன், எஸ்ஐ ஏழுமலை, தனிப்பிரிவு ஏட்டு விஜய் உள்ளிட்டோர் சம்பவ இடத்திற்கு சென்று கஞ்சா செடியை பறிமுதல் செய்தனர். போலீஸ் வருதை அறிந்த கண்ணுசாமி தலைமறைவாகி விட்டார்.இதுகுறித்து கச்சிராயபாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து குற்றவாளியை தேடி வருகின்றனர்….

The post வீட்டின் பின்புறம் கஞ்சா செடி வளர்த்த முதியவர் மீது வழக்கு appeared first on Dinakaran.

Tags : Chinnasalem ,Kachirayapalayam ,Dinakaran ,
× RELATED கிணற்றில் தவறி விழுந்த வாலிபருக்கு கை முறிவு