கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அருகே பாறையூர் ஏரியில் மூன்று காட்டு யானைகள் ஏரி நீரில் குளித்து உற்சாகமாக விளையாடியது. பொதுமக்கள் மற்றும் விவசாயிகளுக்கு வனத்துறை சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டை வனச்சரகத்திற்கு உட்பட்ட ஊடேதூர்க்கம் வனப்பகுதியில் இருந்து கடந்த ஆறு மாதத்திற்கு முன்பு இரண்டு ஆண் யானைகள் மற்றும் ஒரு மக்னா யானை என மூன்று காட்டு யானைகள் இடம்பெயர்ந்து கிருஷ்ணகிரி, தர்மபுரி, மாவட்டங்களில் சுற்றி வருகிறது. விவசாயிகள் உற்பத்தி செய்யும் பயிர்களை சேதம் செய்தும் வருகின்றது. கடந்த நவம்பர் 14ம் தேதி கிருஷ்ணகிரி சுங்கச்சாவடி அருகே முகாமிட்ட மூன்று யானைகளை வனத்துறையினர் விரட்டினர். இந்நிலையில் இன்று காலை கிருஷ்ணகிரி- ராயக்கோட்டை சாலை, பாலகுறி அடுத்த பாறையூர் ஏரியில் குளியல் போட்ட மூன்று யானைகள் ஏரியில் தொடர்ந்து விளையாடி வருகிறது. இன்று மாலை யானைகளை வனத்திற்குள் விரட்டும் பணி துவங்கும் என வனத்துறையினர் கூறினர். அதுவரை அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் வீட்டில் இருந்து வெளியில் வர வேண்டாம் எனவும் வனத்துறை சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டது….
The post பாறையூர் ஏரியில் ஆனந்த குளியல் போட்ட மூன்று யானைகள் appeared first on Dinakaran.