×

அம்பேத்கர் சிலைக்கு காவி சட்டை அணிவிக்க மாட்டேன்: ஐகோர்ட்டில் அர்ஜுன் சம்பத் உத்தரவாதம்

சென்னை: டாக்டர் அம்பேத்கர் நினைவு தினத்தை முன்னிட்டு சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள அவரது மணிமண்டபத்தில் அஞ்சலி செலுத்த செல்லும்போது பாதுகாப்பு வழங்க பட்டினப்பாக்கம் போலீசாருக்கு உத்தரவிடக்கோரி அர்ஜுன் சம்பத் சார்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு நேற்று நீதிபதி சந்திரசேகர் முன்பு விசாரணைக்கு வந்தபோது அர்ஜுன் சம்பத் தரப்பில் உத்தரவாத கடிதம் தாக்கல் செய்யப்பட்டது. அதில், அம்பேத்கரின் சிலைக்கு காவி உடை அணிவிக்கவோ, காவி துண்டு போடுவதோ அல்லது விபூதி மற்றும் குங்குமம் வைக்கவோ மாட்டேன். அம்பேத்கரின் மணிமண்டபத்தில் அஞ்சலி செலுத்திய பிறகு ஊடகங்களுக்கு  பேட்டி அளிக்க மாட்டேன் என்று இருந்தது. இதை ஏற்றுக்கொண்டு அம்பேத்கர் மணி மண்டபத்தில் அர்ஜுன் சம்பத் அஞ்சலி செலுத்துவதற்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கும்படி பட்டினப்பாக்கம் போலீசாருக்கு உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்….

The post அம்பேத்கர் சிலைக்கு காவி சட்டை அணிவிக்க மாட்டேன்: ஐகோர்ட்டில் அர்ஜுன் சம்பத் உத்தரவாதம் appeared first on Dinakaran.

Tags : Ambedkar ,Arjun Sampath ,ICourt Chennai ,Dr. ,Raja ,Chennai ,Mani ,Mandapam ,Annamalaipuram ,ICourt ,
× RELATED அம்பேத்கர் பிறந்த நாள் விழா