ஏ 1 படத்துக்குப் பிறகு மீண்டும் ஜான்சன் இயக்கத்தில் சந்தானம் ஹீரோவாக நடித்துள்ள படம், பாரிஸ் ஜெயராஜ். இப்பட நிகழ்ச்சியில் சந்தானம் பேசியதாவது: எனது படங்களில் தொடர்ந்து சில நடிகர்களை நடிக்க வைப்பதற்கு காரணம், ஏற்கனவே வெற்றிபெற்ற காம்பினேஷன் மீண்டும் அடுத்த படத்தில் இணையும்போது, ரசிகர்களின் எதிர்பார்ப்பு ஓரளவு பூர்த்தியாகி விடும் என்பதுதான். கானா பாடகர் பாரிஸ் ஜெயராஜ் வேடத்தில் நடித்துள்ளேன். படம் முழுவதும் கானா பாடல்கள் இடம்பெறும்.
சந்தோஷ் நாராயணன் இசை அமைத்துள்ளார். அனைகா சோடி, சஷ்டிகா ராஜேந்திரன் ஹீரோயின்கள். நான் ஆக்ஷன் படத்தில் நடித்தால், உங்களுக்கு ஏன் இந்த வேண்டாத வேலை என்கிறார்கள். ஆக்ஷன் சரியாக வராது என்பதால் காமெடியை தொடர்ந்தால், உங்களுக்கு ஆக்ஷனே வராதா என்கிறார்கள். அரசியலுக்கு வரும் எண்ணம் இல்லை. ஆனால், எனக்கு எம்.பி பதவி தரும் கட்சியில் சேருவேன். இதை சீரியசாக எடுத்துக்கொள்ளாதீர்கள். காமெடிக்காக சொன்னேன்.