×

15 ஆண்டுக்கு பிறகு சிரஞ்சீவியுடன் இணையும் திரிஷா...!

டோலிவுட்டில் மெகா ஸ்டாராக வலம் வருபவர் தான் நடிகர் சிரஞ்சீவி. இவரது நடிப்பில் வெளிவரும் ஒவ்வொரு படத்தையும் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இதுவரை சிரஞ்சீவி 150 படங்களுக்கு மேல்  தெலுங்கில் மட்டுமல்லாமல் தமிழ், கன்னடம், ஹிந்தி ஆகிய மொழிகளில் நடித்துள்ளார். தற்போது சிரஞ்சீவி ‘ஆச்சார்யா’ படத்தில் நடித்து முடித்துள்ளார்.

இந்த படத்தின் ரிலீசை எதிர்நோக்கி அவருடைய ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர். இந்த நிலையில் 15 ஆண்டுகளுக்கு பிறகு மெகா ஸ்டார் சிரஞ்சீவியுடன் இணைந்து பணிபுரிய தமிழ் நடிகை ஒப்பந்தமாகி இருப்பதாக சொல்லப்படுகிறது. அதாவது ‘ஆச்சார்யா’ படத்தில் நடித்து முடித்த கையோடு, சிரஞ்சீவி மலையாள மெகா ஹிட் படமான ‘லூசிபர்’ படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நடிக்க உள்ளாராம்.

இதற்கான ஆரம்பகட்ட பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறதாம். இந்தப் படத்தை மோகன் ராஜா இயக்க உள்ளாராம். மேலும் லூசிபர் மலையாள வெர்ஷனில் காதல் காட்சிகள் எதுவும் இடம் பெற்றிருக்காது. ஆனால் தெலுங்கு ரீமேக்கில் காதல் காட்சிகளை இணைக்க மோகன் ராஜா திட்டமிட்டுள்ளதாகவும், இதற்காக பிரபல தமிழ்  நடிகை திரிஷாவை படக்குழு தேர்வு செய்து இருப்பதாகவும் தெரிகிறது.

Tags : Trisha ,Chiranjeevi ,
× RELATED விஜய்யின் கோட் டில் இணைந்த திரிஷா