×

மனம் மாறிய சமந்தா...!

நாகசைதன்யாவுடன் காதல் திருமணம் நடப்பதற்கு முன்பு வரைக்கும் தன்னைப் பற்றி வெளியான கிசுகிசுக்களை நினைத்து வருத்தப்பட்டு அழுதுள்ளார், சமந்தா. நாளடைவில் தனது மனதை மாற்றிக்கொண்ட அவர், திருமணத்துக்குப் பிறகு எந்த விமர்சனத்தைப் பற்றியும் கவலைப்படுவது இல்லை. ‘நானா இப்படி மாறினேன் என்று நினைத்து பார்க்கும்போது ஆச்சரியமாக இருக்கிறது. என்னைப் பற்றி வெளியாகும் செய்திகளை தோழிகள் சொல்லும்போது, ஏன் இப்படி எழுதுகிறார்கள் என்று வருத்தப்பட்டுள்ளேன்.

நாளடைவில் அந்த எண்ணம் மாறிவிட்டது. சினிமாவில் புகழ்பெற்றால் இப்படித்தான் கிசுகிசு வரும் என்று என்னை தேற்றிக்கொண்டேன்’ என்ற சமந்தா, விக்னேஷ் சிவன் இயக்கத்தில் காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தில் நடிக்கிறார். தெலுங்கில் சகுந்தலை கதையில் நடிக்க கால்ஷீட் கொடுத்துள்ளார். அதிக படங்களில் நடிக்காதது பற்றி அவர் கவலைப்படுவது இல்லை. இதற்கு காரணம் திருமணம் செய்துகொண்டதா என்று கேட்டபோது சிரித்தார். ‘திருமணத்துக்குப் பிறகும் எனது திரையுலக வாழ்க்கையில் எந்தவிதமான மாற்றமும் இல்லை.

கதைகள் மற்றும் படங்களை தேர்வு செய்யும் விஷயத்தில் மட்டுமே என்னை மாற்றிக்கொண்டு இருக்கிறேன். சவாலான ஒரு கேரக்டரில் நடிக்க வேண்டும் என்று, இடைவெளி விட்டு காத்திருக்கிறேன். படங்களில் ஒரேமாதிரியான கேரக்டரில் நடிப்பது எனக்கும், ரசிகர்களுக்கும் போரடித்துவிட்டது. தமிழிலும், தெலுங்கிலும் மறுபடியும் நான் பிசியான கதாநாயகியாக மாறுவேன். அதற்கான கேரக்டர்களுக்காக காத்திருக்கிறேன்’ என்றார்.

Tags : Samantha ,
× RELATED எல்லா பிரச்னைகளில் இருந்தும் விடுபட்டுள்ளேன்: சமந்தா மகிழ்ச்சி