×

விவசாயிகள் போராட்ட விவகாரத்தில் அச்சுறுத்தல்: நடிகர் சன்னி தியோலுக்கு ‘ஒய் - கிளாஸ்’ பாதுகாப்பு

மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் 21வது நாளாக விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில், பஞ்சாபை சேர்ந்த பாலிவுட் நடிகரும் பாஜக எம்பியுமான சன்னி தியோலின் பாதுகாப்பை மத்திய உள்துறை அமைச்சகம் அதிகரித்துள்ளது. விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தும் இவருக்கு எதிராகவும் பல்வேறு தீவிரவாத குழுக்களிடம் இருந்து அச்சுறுத்தல் இருந்ததால், சன்னி தியோலுக்கு ‘ஒய்-கிளாஸ்’ பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்தில் சன்னி தியோல் வெளியிட்ட டிவிட் பதிவில், ‘நான் பாஜக பக்கமும் நிற்கிறேன். விவசாயிகள் போராட்டத்தையும் ஆதரிக்கிறேன். விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்திய பின் அரசு சரியான நடவடிக்கை எடுக்கும் என்று நம்பிக்கை உள்ளது. இப்பிரச்னையில் பலர் நன்மைகளை அடைய முயன்று பிரச்னைகளை உருவாக்க முயல்வதை நான் அறிவேன்’ என்று கூறியிருந்தார். ஆனால், அவரின் இந்த டிவிட்டை ‘சன்னி தியோல் இரட்டை முகம் கொண்டவர், முதுகெலும்பில்லாதவர்’ என்று நெட்டிசன்கள் கடுமையாக விமர்சித்தும் மீம்ஸ்களை போட்டும் வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags :
× RELATED நெவர் எஸ்கேப் விமர்சனம்