×

தம்பி மகளுக்கு ரூ.1.50 கோடியில் திருமண பரிசு: சிரஞ்சீவி தாராளம்

தம்பி மகளும் நடிகையுமான நிஹாரிகாவுக்கு ரூ.1 கோடியே 50 லட்சம் மதிப்புள்ள திருமண பரிசுகளை வழங்கியுள்ளார் நடிகர் சிரஞ்சீவி. தெலுங்கு சினிமா சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவியின் தம்பிகள் பவன் கல்யாண், நாகேந்திர பாபு. இதில் நாகேந்திர பாபுவின் மகள் நிஹாரிகா, தெலுங்கில் சில படங்களில் ஹீரோயினாக நடித்தார். தமிழில் விஜய் சேதுபதி நடித்த ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன் படத்தில் நடித்திருந்தார். இவர் சைதன்யா என்பவரை காதலித்து வந்தார். இரு வீட்டாரும் சம்மதம் தெரிவித்ததும் நிச்சயதார்த்தம் நடந்தது. இன்று உதய்ப்பூரில் திருமணம் நடைபெற உள்ளது. இதை முன்னிட்டு திருமண சடங்கு நிகழ்ச்சிகள் ஐதராபாத்தில் நேற்று முன்தினம் நடைபெற்றது.

அப்போது ரூ.1.50 கோடி மதிப்புள்ள ஆபரணங்கள், பரிசு பொருட்களை நிஹாரிகாவுக்கு வழங்கினார் சிரஞ்சீவி. பெரியப்பா என்றாலும் சிரஞ்சீவி மீதுள்ள பாசத்தால் அவரை நிஹாரிகா அப்பா என்றுதான் அழைப்பாராம். இந்த பாசம் காரணமாகவே அவர் நிஹாரிகாவுக்கு விலை உயர்ந்த பரிசு பொருள்களை வழங்கியிருப்பதாக சினிமா வட்டாரத்தில் சொல்கிறார்கள்.

Tags : cousin ,Chiranjeevi ,
× RELATED திருத்தணி அருகே வாகன சோதனையின்போது ரூ.25.90 லட்சம் பறிமுதல்..!!