×

பாம்பை துன்புறுத்தியதாக நடிகர் சிம்பு மீது வனத்துறையிடம் புகார்

சுசீந்திரன் இயக்கும் ஈஸ்வரன் படத்தில் சிம்பு நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு காட்சிகள் சமூகவலைதளங்களில் வீடியோவாக வெளியாகியுள்ளன. அதில், சிம்பு உயிருடன் உள்ள பாம்பை மரத்தில் இருந்து பிடித்து சாக்குப்பையில் போடுவது போல காட்சி இடம்பெற்றுள்ளது. படத்தில் இந்த காட்சி இல்லை. ஆனால் நிஜத்தில் உயிருடன் இருந்த பாம்பை பிடித்து சிம்பு சாக்குப் பையில் போட்டிருக்கிறார்.

வனவிலங்குகளை துன்புறுத்துவது குற்றம் என்பதால் வன உயிரின பாதுகாப்பு சட்டத்தை சிம்பு மீறியிருப்பதாக கூறி அவர் மீது உரிய பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்ய கோரி விலங்கு நல ஆர்வலர் ஷர்வன் கிருஷ்ணமூர்த்தி என்பவர், வேளச்சேரியிலுள்ள வனத்துறை அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். மேலும் விலங்குகள் நல வாரியத்துக்கும் அவர் கடிதம் அனுப்பியுள்ளதாக கூறப்படுகிறது.

Tags : Simbu ,forest department ,
× RELATED கொல்லிமலை காப்புக்காட்டில் சுற்றுலா...