×

மலையாளப் படங்களில் இனி பாட மாட்டேன்: விஜய் யேசுதாஸ் அறிவிப்பு

திருவனந்தபுரம்: மலையாள படங்களில் இனி பாடப் போவதில்லை என்று பாடகரும், நடிகருமான விஜய் யேசுதாஸ் அறிவித்துள்ளார். பிரபல பாடகர் கே.ஜே.யேசுதாசின் மகன் விஜய் யேசுதாஸ். கடந்த 2000ம் ஆண்டு மலையாள சினிமாவில் பாடத் தொடங்கினார். தமிழ், தெலுங்கு, கன்னடம் இந்தி உள்பட பல மொழிகளில் 300க்கும் மேற்பட்ட பாடல்கள் பாடியிருக்கிறார். தமிழில் தனுஷ் நடித்த மாரி படத்தில் வில்லன் வேடம் ஏற்று நடித்தார். இந்நிலையில், மலையாளப் படங்களில் இனி பாடப் போவதில்லை என்று தடாலடியாக அறிவித்துள்ளார்.

இதுகுறித்து மலையாள பத்திரிகை ஒன்றிற்கு விஜய் யேசுதாஸ் அளித்த பேட்டியில், ‘மலையாள திரையுலகில் இசை அமைப்பாளர்களுக்கும் மற்றும் பின்னணி பாடகர்களுக்கும் உரிய மரியாதை கிடைப்பதில்லை. ஆனால் தமிழ், தெலுங்கு போன்ற மொழிகளில் அப்படி கிடையாது. அங்கு பின்னணி பாடகர் மற்றும் பாடகிகளுக்கு நல்ல மரியாதை கொடுக்கின்றனர். மலையாளப் படவுலகில் பலமுறை நான் பல்வேறு அவமானங்களை சந்தித்துள்ளேன். இனிமேலும் நான் அவமானங்களை சந்திக்க விரும்பவில்லை. எனவே, இனி மலையாளப் படங்களில் பாடப் போவதில்லை’ என்று பரபரப்பாக கூறியுள்ளார்.

Tags : announcement ,Vijay Yesudas ,
× RELATED பிளாக்பஸ்டர் பார்டர்-கவாஸ்கர் டிராபி:...