×

முஸ்லிம் மதகுரு சுட்டுக் கொலை: ஈரானில் பயங்கரம்

தெஹ்ரான்: ஈரானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் மூத்த முஸ்லிம் மதபோதகர் மொலவி அப்துல்வாஹெத் ரிகி என்பவர் சாலையோரம் நடந்து சென்ற போது, அவ்வழியாக சென்ற நபர்கள் அவரது தலையில் மூன்று முறை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றனர். அவரது உடலை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன் புரட்சி குழுக்களுக்கு எதிராக மதகுரு மொலவி அப்துல்வாஹெத் ரிகி விமர்சனங்களை முன்வைத்த நிலையில், தற்போது அவர் சுட்டுக் கொல்லப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். அதேபோல் கொராசன் ரசாவி மாகாணத்தில் மற்றொரு மதகுரு மீது துப்பாக்கி சூடு நடந்துள்ளது. ஆனால் அவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். இதுதொடர்பாக இஸ்லாமிய புரட்சிக் காவலர் படையை சேர்ந்த சிலரை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் அவர்களின் மறைவிடத்திலிருந்து ஆயுதங்கள், வெடிமருந்துகள் மற்றும் வெடிபொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது….

The post முஸ்லிம் மதகுரு சுட்டுக் கொலை: ஈரானில் பயங்கரம் appeared first on Dinakaran.

Tags : Iran ,Tehran ,Balochistan ,Mowlavi Abdulwahed Righi ,
× RELATED ஈரானில் போர் பதற்றம் நிலவும் நிலையில்,...