×

சேலம் அருகே வியப்பூட்டும் ஓவியங்கள் வரைந்து கவனம் ஈர்க்கும் மாற்றுத்திறன் மங்கை: திறமையை ஊக்குவிக்க பெற்றோர் உருக்கம்

தாரமங்கலம்: சேலம் தாரமங்கலம் அருகே 3அடி உயர மாற்றுத்திறன் வரையும் ஓவியங்கள் பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது. அவரது திறமையை மேம்படுத்த அரசு ஊக்கமளிக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது. சேலம் மாவட்டம் தாரமங்கலத்தில் உள்ளது தெசவிளக்கு கிராமம். இங்குள்ள மாட்டையாம்பட்டி பகுதியை சேர்ந்த கந்தசாமி-சின்னப்பொண்ணு தம்பதிகளுக்கு மலர்விழி, சுசீலா என்று 2பெண்கள் உள்ளனர். 30வயதை கடந்த இவர்கள் இருவரும் 3அடி உயரம் மட்டுமே கொண்டவர்கள். இதில் இளையவரான சுசீலாவால் எழுந்து நடக்க இயலாது. அமர்ந்தபடியே தனக்கான பணிகளை மேற்கொள்கிறார். இப்படிப்பட்ட நிலையில் சுசீலா வரைந்து காட்சிப்படுத்தியுள்ள கண்கவர் ஓவியங்கள், பார்ப்போரின் கவனத்தை வெகுவாக ஈர்த்து வருகிறது.இது குறித்து அவர்களது பெற்றோர் கூறியதாவது: இரண்டு மகள்களும் மாற்றுத்திறனாளியாக இருந்தாலும், நெசவுத்தொழில் செய்து அவர்களுக்கான தேவைகளை நிறைவேற்றி வருகிறோம். சுசீலா அருகில் உள்ள அரசுப்பள்ளியில் எட்டாம் வகுப்புவரை படித்தார். அப்போது ஆசிரியர்கள் வரைவதை பார்த்து அவருக்கு ஆர்வம் ஏற்பட்டது. இதனால் வீட்டில் இருக்கும் போதெல்லாம் ஓவியங்களை வரைய ஆரம்பித்தார். அவரது ஆர்வத்தை கட்டும் ஆசிரியர்களும் பயிற்சி அளித்தனர். அதற்கு பிறகு தற்போதுவரை 250க்கும் மேற்பட்ட ஓவியங்களை வரைந்துள்ளார். சென்னை, பெங்களூரு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் அதை காட்சிப்படுத்தி பரிசுகளையும் பாராட்டுகளையும் பெற்றுள்ளார். எப்படிப்பட்ட ஓவியத்தையும் அரை மணி நேரத்தில் வரைந்து விடுவார். ஆனால் அவரது ஓவியத்திறமையை முழுமையாக எங்களால் வெளிஉலகிற்கு கொண்டு வர முடியவில்லை. தான்வரைந்த ஓவியங்களை புத்தக வடிவில் கோர்த்து பாதுகாத்து வருகிறார். வீட்டில் போதிய வசதி இல்லாததால் பக்கத்து வீட்டிலும் ஓவியங்களை அடுக்கி வைத்துள்ளார். அவரது திறமையை ஊக்குவிக்கும் வகையில், அரசு பள்ளியில் ஓவியஆசிரியர் பணியை முதல்வர் வழங்க வேண்டும். இதனால் அவரது வாழ்க்கை ேமம்படுவதோடு, தனது திறனை குழந்தைகளுக்கு கற்றுக் கொடுக்கவும் வாய்ப்பு கிடைக்கும். இவ்வாறு பெற்றோர் கூறினர்….

The post சேலம் அருகே வியப்பூட்டும் ஓவியங்கள் வரைந்து கவனம் ஈர்க்கும் மாற்றுத்திறன் மங்கை: திறமையை ஊக்குவிக்க பெற்றோர் உருக்கம் appeared first on Dinakaran.

Tags : Salem ,Tharamangalam ,
× RELATED சேலத்தில் கொலையானவர் அடையாளம்...