ஆந்திராவில் முன்னணி நடிகராக இருந்து, பிறகு தனிக்கட்சி தொடங்கி முதலமைச்சர் ஆனவர், என்.டி.ராமாராவ். அவரது வாரிசுகள் அரசியலிலும், சினிமாவிலும் முன்னணியில் உள்ளனர். தெலங்கானா மாநில கல்வி திட்டத்தின் கீழ் 10ம் வகுப்பு பாடப் புத்தகத்தில் என்.டி.ஆர் வாழ்க்கை வரலாறு பாடமாக சேர்க்கப்பட்டு உள்ளது. இதுகுறித்து என்.டி.ஆர் குடும்பத்தினர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பாடப் புத்தகத்தில் என்.டி.ஆர் வரலாற்றை சேர்த்து பெருமைப்படுத்திய தெலங்கானா அரசுக்கு நன்றி என கூறியுள்ளனர்.