பிரபல வழக்கறிஞரும் நடிகருமான துரைபாண்டியன் இன்று சென்னையில் காலமானார். அவரது மறைவை அடுத்து திரையுலகினர்களும், சக வழக்கறிஞர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். மேலும் இவர் ஒரு சில தமிழ் திரைப்படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. மௌனம் பேசியதே, ரன், ஜெமினி உள்ளிட்ட படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்தவர் துரைப்பாண்டியன்.
நுரையீரல் பிரச்சனை மற்றும் நீரிழவு நோயால் பாதிக்கப்பட்டிருந்த துரைப்பாண்டியன் நெஞ்சுவலி காரணமாக கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். இந்நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த துரைப்பாண்டியன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். அவருக்கு கொரோனா தொற்று இல்லை என கீழ்ப்பாக்கம் மருத்துவமனை தெரிவித்துள்ளது.