×

மம்மூட்டி பர்த்டே துல்கர் நெகிழ்ச்சி

மம்மூட்டி நேற்று தனது 69வது பிறந்த நாளை கொண்டாடினார். தந்தைக்கு அன்பு முத்தம் கொடுத்த மகன் துல்கர் சல்மான், இது பற்றி கூறும்போது, ‘எனக்கு எல்லாமும் ஆனவர் நீங்கள் (மம்மூட்டி). நீங்கள் இல்லாவிட்டால் இந்த வாழ்க்கை இல்லை. குழந்தை பருவமாகட்டும் சிறு வயது முதல் இளமை பருவமாகட்டும் உங்களை பார்த்துதான் வளர்ந்தேன். நீங்கள் காட்டிய வழியில்தான் செல்கிறேன். எங்கள் குடும்பத்தின் விலை மதிப்பற்ற சொத்து நீங்கள். என்னை அதிகம் கேட்பவர் நீங்கள். 

எனது மன அமைதிக்கு காரணமானவரும் நீங்கதான் அப்பா. வயதானாலும் தொடர்ந்து உங்கள் இளமை கூடியபடி இருக்கிறது. இளம் தலைமுறைக்கு நீங்கள் நல்ல பாடம். ஒழுக்கம் என்பதற்கான எனக்கு தெரிந்த முழு பொருளும் நீங்கள்தான். இந்த பிறந்த நாளில் உங்களுடனே இருந்து கொண்டாடிய மகிழ்ச்சியான தருணம் மறக்க முடியாதது. வாழ்த்துகள் அப்பா’ என தெரிவித்துள்ளார். 

Tags :
× RELATED ரசிகர் மரணம்: வீட்டுக்கு சென்று ஆறுதல் கூறிய நடிகர் ஜெயம் ரவி!