×

கங்கனாவுக்கு கோபம் வந்தால்...

பயங்கர முன்கோபி யாரென்று கேட்டால், யோசிக்காமல் பதில் சொல்வார்கள், நயன்தாரா என்று. இப்போது அவரை பின்னுக்கு தள்ளிவிடுவார் போலிருக்கிறது, கங்கனா ரனவத். லாக்டவுனுக்கு முன் சென்னையில் நடந்த தலைவி படத்தின் படப்பிடிப்பில் பங்கேற்ற அவர், முதலமைச்சருக்கு கூட இவ்வளவு பாதுகாப்பு அதிகாரிகள் இருக்க மாட்டார்கள் என்று சொல்லும் அளவுக்கு பயங்கர பந்தோபஸ்துடன் படப்பிடிப்புக்கு வருவாராம். அதிகாலையிலோ அல்லது 7 மணி கால்ஷீட்டுக்கோ வருவது அவரது பழக்கம் இல்லையாம். காலை 11 மணிக்கு வந்தாலும், தனது வசனங்களின் அர்த்தம் புரிந்துகொண்டு, சிங்கிள் டேக்கில் நடித்து அசத்திவிடுவாராம். எதற்காவது அவர் கோபித்துக்கொண்டால், அதிக மவுனத்தை கடைபிடித்து உணர்த்துவாராம். எல்லா மொழியிலும் கங்கனாவுக்கு மார்க்கெட் இருப்பதால், அவரது குறைகளைப் பற்றி யாரும் பெரிதுபடுத்துவது இல்லையாம்.

Tags : Kangana ,
× RELATED பா.ஜ வேட்பாளராக நிறுத்தப்பட்ட நடிகை...