×

சுஷாந்த் சிங் விவகாரத்தில் மவுனம் அமிதாப்பை விமர்சித்த கங்கனா

சுஷாந்த் சிங் தற்கொலை விவகாரத்தில் அமிதாப் பச்சன் ஏன் மவுனமாக இருக்கிறார் என்று கேள்வி எழுப்பியுள்ளார், நடிகை கங்கனா ரனவத்.பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் தற்கொலை விவகாரத்தில் பல்வேறு தயாரிப்பாளர்கள், நடிகர்கள், இயக்குனர்கள் மீது தொடர்ந்து குற்றச்சாட்டு சுமத்தி வருகிறார் கங்கனா ரனவத். இந்நிலையில் அவர் கூறும்போது, ‘இந்த விவகாரத்தில் அமிதாப் பச்சன் அமைதியாக இருப்பது ஏன்? சுஷாந்தும் அமிதாப் பணியாற்றும் இதே துறையை சேர்ந்தவர்தான். 

சுஷாந்துக்கு ஏற்பட்ட அநீதியை பற்றி அவர் ஏன் வாய் திறக்காமல் இருக்கிறார்? அவரை போன்றவர்கள் இது பற்றி பேச முன்வந்தால்தான், பாலிவுட்டை ஆட்டிப்படைக்க விரும்புபவர்கள் பயப்படுவார்கள்’ என்றார். இதே விவகாரத்தில் நடிகர் நஸீருத்தின் ஷாவையும் கங்கனா கடுமையாக விமர்சித்துள்ளார். தொடர்ந்து பலரையும் தாக்கி பேசி வருவதால் கங்கனா மீது கடுப்பாகியுள்ள நெட்டிசன்கள், அவரை சாடும் விதமாக கடுமையான கருத்துகளை கூறி வருகின்றனர்.

Tags : Gangana ,Amitabh ,Sushant Singh ,
× RELATED இந்தியா கூட்டணியால்தான் பாதுகாப்பான...