×

கொரோனாவை விட கொடியது போதை பொருள்: ஏ.ஆர்.ரஹ்மான் எச்சரிக்கை

உலகம் முழுவதும் சர்வதேச போதை பொருள் உபயோகம் மற்றும் கடத்தலுக்கு எதிரான நாள் நேற்று அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி காவல்துறையினருடன் இணைந்து இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் வீடியோ ஒன்றை தயாரித்து வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியதாவது: போதைப் பொருள் பயன்படுத்துதல் மற்றும் கடத்தல் ஆகியவற்றுக்கு எதிராக குரல் கொடுக்க வேண்டிய நாள் இது. இன்றைய நிலையில் அனைவருக்கும் விழிப்புணர்வு அவசியம். கோவிட்-19 வைரஸ் தாக்குதலில் இருந்து விரைவில் மீண்டு விடலாம். ஆனால், போதைப் பொருட்களுக்கு அடிமையாகிவிட்டால் மீள்வது சிரமம்.

போதைப் பொருட்கள் பயன்படுத்துவதால் ஏற்படும் விளைவுகள் பயங்கரமானவை. அது தீய எண்ணங்களையும், கெட்ட நடத்தைகளையும் உருவாக்கும். பலரது வாழ்க்கை அடியோடு அழிந்துவிடும். கொடூர குற்றங்கள், வன்கொடுமை, சிறுவர்களின் வாழ்க்கை சீரழிவு போன்ற பல்வேறு தீயசெயல்கள் போதைப் பொருட்கள் பயன்பாட்டால் ஏற்படும் விளைவுகளாகும். எனவே, இளைய தலைமுறையை காப்பாற்றுவோம் என்று ஒவ்வொருவரும் சபதம் எடுத்துக்கொள்வோம்.

Tags : AR Rahman ,
× RELATED ஷகிரா மாதிரி யோசி… பியான்சே போல பாடு!