×

ஊரடங்கால் பணி இழந்தவர்களுக்கு வேலை வாய்ப்பு பெற்றுத்தரும் நடிகர் ஆரி

கொரோனா  ஊரடங்கு காரணமாக பலருக்கு வேலை வாய்ப்பு பறிபோகும் சூழ்நிலை உருவாகி  உள்ளது. இதன் காரணமாக வேலை வாய்ப்பை இழக்கும் இளைஞர்கள் குறிப்பாக  பெண்களுக்கு வேலைவாய்ப்பு பெற்றுத் தரும் முயற்சியில் இறங்கி இருக்கிறார்  நடிகர் ஆரி அர்ஜுனா. இது குறித்து அவர் கூறியிருப்பதாவது: கொரோனா  ஊரடங்கு காலத்தில் அரசும், தன்னார்வ அமைப்புகளும் கண்டுகொள்ளாத ஒரு  பிரிவினர் இலங்கை அகதிகள்தான். அதனால் சில வெளிநாட்டு நண்பர்களுடன் இணைந்து  அகதிகள் முகாமிற்கு சென்று அவர்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை  வழங்கினேன்.இப்போது எல்லோருமே அரிசி, மளிகை சாமான்கள் வழங்கி  வருகிறார்கள். அரசும் அதையே செய்கிறது. ஆனால் மக்களின் நீண்டகாலத் தேவை  வேலைவாய்ப்பு. கொரோனா ஊரடங்கு காரணமாக எல்லா தொழில்களுமே நசிந்துள்ளது. 

இனி ஆட்குறைப்பும், வேலை இழப்பும் அதிகமாகும், புதிதாக வேலை வாய்ப்பு  கிடைப்பதும் அரிதாக இருக்கும். இதை கருத்தில் கொண்டு வேலை  இழக்கும், இளைஞர்கள், குறிப்பாக பெண்களுக்கு அவரவர் பகுதியில் உள்ள  சூழ்நிலைகளை பொறுத்து சுயசார்பு தொழில்களை உருவாக்கி கொடுத்தல், வேலைவாய்ப்புகளை உருவாக்கி கொடுத்தல் போன்ற பணிகளை செய்ய இருக்கிறோம். தற்போது எனது, மாறுவோம் மாற்றுவோம் அறக்கட்டளை மூலம் அதற்கான கணக்கெடுப்பு  பணிகள் நடந்து வருகிறது என்றார்.

Tags : Arya ,
× RELATED விஜய் சேதுபதி, ஆர்யா வெளியிட்ட அசோக்...