தெலுங்கில் சரிலேரு நீக்கெவரு படத்தில் மகேஷ்பாபு ஜோடியாக நடித்தார் ராஷ்மிகா. இந்த படம் கடந்த ஜனவரியில் திரைக்கு வந்து ஹிட்டானது. அடுத்து அல்லு அர்ஜுன் ஜோடியாக புஷ்பா படத்தில் நடிக்கிறார். நானி நடிப்பில் உருவாகும் தெலுங்கு படம் ஷியாம் சிங்க ராய். இதில் ஹீரோயினாக நடிக்க சாய் பல்லவி ஏற்கனவே ஒப்பந்தமாகியுள்ளார். இன்னொரு ஹீரோயினாக நடிக்க ராஷ்மிகாவிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். படத்தில் சாய் பல்லவி நடிப்பது தெரிந்ததும், இதில் நடிக்க மறுத்துவிட்டார் ராஷ்மிகா. வழக்கமாக தனக்கு அதிக முக்கியத்துவம் உள்ள படங்களில் மட்டுமே சாய்பல்லவி நடிப்பார். ஹீரோவை விட அவருக்கு முக்கியத்துவம் தரும் கேரக்டரை தேடிப்பிடித்து அவர் நடித்து வருகிறார். இந்த படத்தில் அவர் நடிப்பதால், அவருக்கே முக்கியத்துவம் இருக்கும் என நினைத்த ராஷ்மிகா, ஷியாம் சிங்க ராய் படத்தில் நடிக்க மறுத்துவிட்டார்.