×

அஜித் வடிவமைத்த ட்ரோன் மூலம் கிருமி நாசினி தெளிப்பு

தமிழகத்தில் சிவப்பு மண்டல பகுதிகளில், அஜித் வடிவமைத்த ட்ரோன்கள் மூலம் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு வருகிறது. ட்ரோன்கள் வடிவமைக்கும் பணியிலும் அஜித் ஈடுபடுகிறார். அண்ணா பல்கலைக்கழகத்தில் தக்‌ஷா என்ற குழுவுடன் இணைந்து மருத்துவ துறைக்கான ட்ரோன்களை அஜித் வடிவமைத்தார். தேசிய அளவில் கல்லூரிகளுக்கு இடையே நடந்த போட்டியில் இந்த ட்ரோன்கள் முதல் பரிசையும் ஆஸ்திரேலியாவில் நடந்த போட்டியில் இரண்டாம் இடத்தையும் பெற்றன. இந்த ட்ரோன்கள் மூலம் மருத்துவ உபகரணங்களை ஓரிடத்திலிருந்து இன்னொரு இடத்துக்கு கொண்டு செல்லலாம் என தெரிவிக்கப்பட்டது. 

இந்நிலையில் இந்த ட்ரோன்களை கொரோனா ஒழிப்பு பணிக்கு பயன்படுத்தி கொள்ளும்படி தமிழக அரசுக்கு அஜித் கோரிக்கை வைத்திருந்தார். அதன்படி தமிழகத்தில் கொரோனா அதிகம் பாதித்த சிவப்பு மண்டல பகுதிகளில் இந்த ட்ரோன்கள் மூலம் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு வருகிறது. அரைமணி நேரத்தில் ஒரு ட்ரோன் மூலம் 16 லிட்டர் கிருமி நாசினி தெளிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.

Tags : Ajith ,
× RELATED தனது ஜனநாயக கடமையை ஆற்ற முதல் ஆளாக வருகை தந்த நடிகர் அஜித்!