×

சுஷாந்த் சிங் காதலி மீது திடீர் வழக்கு: போலீசிடம் மறைத்த விஷயம்

பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத், கடந்த 14ம் தேதி தற்கொலை செய்துகொண்டார். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர். சுஷாந்தை 7 படங்களிலிருந்து நீக்கியதால் அவர் மனஅழுத்தத்தில் இருந்தார் என்றும் இதனாலேயே தற்கொலை செய்துகொண்டார் என்றும் கூறப்படுகிறது. அவரை படங்களிலிருந்து நீக்கியதன் பின்னணியில் நடிகர் சல்மான் கான், தயாரிப்பாளர்கள் கரண் ஜோஹர், ஏக்தா கபூர், சஞ்சய் லீலா பன்சாலி உள்ளிட்டோர் இருந்ததாக தகவல் பரவியுள்ளது. இவர்கள் மீது வழக்கும் தொடரப்பட்டுள்ளது. இந்நிலையில் சுஷாந்த் சிங்கின் காதலியான ரியா சக்ரவர்த்தி மீது குந்தன் குமார் என்பவர் பாட்னா நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். அவர் தாக்கல் செய்துள்ள மனுவில், ‘சுஷாந்துடன் ரியா ஒரே வீட்டில் வசிந்து வந்தார். ஆனால் இவர்களுக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு கடந்த சில நாட்களுக்கு முன் பிரிந்தனர். ரியா தனது வீட்டுக்கு சென்றுவிட்டார். அதன் பிறகு தனது இன்ஸ்டாகிராமிலிருந்து ரியாவின் புகைப்படங்களை சுஷாந்த் நீக்கியுள்ளார். சுஷாந்தின் தற்கொலைக்கு ரியாவும் காரணமாக இருந்துள்ளார்’ என குறிப்பிட்டுள்ளார்.

சுஷாந்த் சிங் ராஜ்புத், வீடியோ கேம் வடிவமைக்கும் நிறுவனம் ஒன்றை நடத்தி வந்துள்ளார். இந்த நிறுவனத்தில் திடீரென அவர் ரியாவை இயக்குனராக நியமித்தார். பிறகு நிறுவனத்தின் பெயரில் ரியா என இடம்பெறும்படி செய்தார். இதற்கிடையே தனது தம்பியையும் இந்த நிறுவனத்தில் இயக்குனராக ரியா சேர்த்துள்ளார். ஆனால் இந்த நிறுவனத்தில்  ரியாவோ அவரது தம்பியோ எதுவும் முதலீடு செய்யவில்லை. இந்த தகவலையெல்லாம் 11 மணி நேர போலீஸ் விசாரணையில் ரியா மறைத்துள்ளார். இது பற்றி தெரிந்ததும் இப்போது போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளனர்.

Tags : Sushant Singh ,abduction ,
× RELATED “சென்னையில் குழந்தை கடத்தல் எதுவும்...