×

சுஷாந்த் போல் அதிகாரவர்க்கத்தால் சினிமாவில் பாதிக்கப்பட்டேன்: பிரகாஷ்ராஜ் உருக்கம்

திரையுலகில் அதிகாரவர்க்கத்தால் அதிகம் பாதிக்கப்பட்டேன் என நடிகர் பிரகாஷ்ராஜ் தெரிவித்துள்ளார். பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத், தற்கொலை செய்துகொண்டார். பாலிவுட்டில் நிலவும் வாரிசு அரசியல் காரணமாகவே சுஷாந்த் சிங் பாதிக்கப்பட்டதாக புகார் எழுந்துள்ளது. குறிப்பிட்ட தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள், நடிகர்கள் சேர்ந்து சுஷாந்தை புறக்கணித்ததாக குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.

இதுபற்றி பிரகாஷ்ராஜ் டிவிட்டரில் கூறியிருப்பதாவது: அதிகாரவர்க்கத்தால் அதிகம் பாதிக்கப்பட்டவன் நான். ஆனால் அதையும் தாண்டி நான் பணியாற்றினேன். எனது காயங்கள் என் தசைகளை விட ஆழமானது. ஆனால் குழந்தை சுஷாந்த் சிங் ராஜ்புத்தினால் அதை தாங்க முடியவில்லை. மீண்டும் நாம் அவரை பெற முடியுமா? அதிலிருந்து மீண்டு எழுந்து நிற்கப்போகிறோமா அல்லது அந்த கனவுகளை சாகடிக்கப்போகிறோமா?  இவ்வாறு பிரகாஷ்ராஜ் கூறியுள்ளார்.

Tags : Sushant Paul ,victim ,Prakashraj ,
× RELATED நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவை வீழ்த்த நடிகர் பிரகாஷ்ராஜ் அழைப்பு