×

சினிமாவால் காதலை இழந்தேன்: தேஜஸ்வி

நட்பதிகாரம் 79 என்ற படத்தில் நடித்தவர் தேஜஸ்வி. தெலுங்கில் பல படங்களில் நடித்துள்ளார். இப்போது கமிட்மென்ட் என்ற படத்தில் நடித்து வருகிறார். அவர் கூறியது: நடிகைகளை பட வாய்ப்புக்காக உல்லாசத்துக்கு அழைக்கும் போக்கு சினிமா உலகில் அதிகம் உள்ளது. படங்களில் நடிக்க வந்த புதிதில் நானும் இதுபோல் இரட்டை அர்த்த வார்த்தைகளுக்கு ஆளானேன். அதிலிருந்து மீண்டு வந்துவிட்டேன். பட வாய்ப்புக்காக இதுபோல் நடந்து கொள்ளக்கூடாது என்பதில் தீர்மானமாக இருந்தேன். அதேபோல் போராடி ஜெயித்தேன். இந்த எண்ணம், போராட்ட குணம் அனைவருக்கும் இருக்கும் என சொல்ல முடியாது. மும்பையை சேர்ந்த நடிகைகள் அதிகம் தென்னிந்திய படங்களில் நடிக்கிறார்கள். அவர்கள் இதுபோன்ற செயல்களுக்கு பணிந்து போய்விடுகிறார்கள். அவர்கள் அந்த மனநிலையோடு தயார் ஆகிவிடுவதால் எதுவும் செய்வதற்கில்லை. அதில் சிலர் மட்டுமே துணிந்து, மறுப்பு தெரிவிக்கிறார்கள். எதிர்ப்பையும் காட்டுகிறார்கள். சினிமாவுக்கு வந்த புதிதில் நான் ஒருவரை காதலித்தேன். சினிமா துறையில் நானும் பாலியல் ரீதியாக பாதிக்கப்பட்டிருப்பேன் என அவர் நினைத்தார். அதனால் எங்கள் காதல் முறிந்து போனது. இவ்வாறு தேஜஸ்வி கூறினார்.

Tags :
× RELATED இடி மின்னல் காதல் விமர்சனம்