×

கொரோனா தாக்கம் அதிகரிப்பதால் மும்பை வீட்டை காலி செய்தார் ஸ்ருதிஹாசன்

மும்பையில் தொடர்ந்து கொரோனா தாக்கம் அதிகரித்து வருவதால் அங்கிருந்த வீட்டை காலி செய்துள்ளார் நடிகை ஸ்ருதிஹாசன். கமல்ஹாசனின் மூத்த மகள் ஸ்ருதிஹாசன், தமிழ், தெலுங்கு படங்களில் நடித்தபடி இசை ஆல்பங்களையும் வெளியிட்டு வருகிறார். இவர் தனது அம்மா சரிகாவுடன் மும்பையில் தங்கியிருந்தார். பிறகு தனியே அடுக்குமாடி குடியிருப்பில் வீடு எடுத்து மும்பையிலேயே வசித்து வந்தார். சென்னை, ஐதராபாத்தில் படப்பிடிப்பு இருந்தால் இங்கு வந்து செல்வார். இந்நிலையில் தற்போது மும்பையில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால் பயந்துபோன ஸ்ருதிஹாசன், அங்கிருந்த வீட்டை காலி செய்துவிட்டார். சென்னையிலும் பாதிப்பு அதிகமாக இருப்பதால், அவர் ஐதராபாத்தில் தங்குவதற்கு முடிவு செய்துவிட்டார். இதையடுத்து ஐதராபாத்தில் வீடு ஒன்றை லீசுக்கு எடுத்து அவர் தங்கியுள்ளார். இங்கிருந்தபடி படப்பிடிப்புக்கு செல்வதும் தனது இசை ஆல்பம் பணிகளில் ஈடுபடுவதும் என முடிவு செய்திருக்கிறார். 

Tags : Sruthihasan ,home ,Mumbai ,Corona ,
× RELATED மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 526 புள்ளிகள் உயர்வு..!!