×

தெலுங்கு தேசம் கட்சி தலைவர் குறித்து தரக்குறைவாக பேசிய ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் நிர்வாகி-திருப்பதி போலீஸ் நிலையத்தில் புகார்

திருப்பதி: தெலுங்கு தேசம் கட்சி தலைவரை தரக்குறைவாக பேசிய ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி நிர்வாகியை கைது செய்ய வலியுறுத்தி திருப்பதி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். தெலுங்கு தேசம் கட்சி இளைஞர் அணி சார்பில் மாநில செயலாளர் ரவி தலைமையில் திருப்பதி  அலிபிரி  காவல் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டர் சின்ன ரெட்டப்பாவிடம் தெலுங்கு தேச கட்சி சந்திரபாபுவை தரக்குறைவாக பேசியவரை கைது செய்ய வேண்டும் என நேற்று புகார் மனு அளித்தனர். இதுகுறித்து, இளைஞர் அணி மாவட்ட செயலாளர் ரவி கூறுகையில், ‘தெலுங்கு தேசம் கட்சி தலைவரும் முன்னாள் முதல்வர் சந்திரபாபு பற்றி அனந்தபூர் மாவட்ட எம்எல்ஏ சகோதரர் சந்திரசேகர் எனும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி நிர்வாகி தரக்குறைவாக பேசி உள்ளார். தெலுங்கு தேச கட்சி பொதுச்செயலாளர் முன்னாள் அமைச்சர் லோகேஷ் நடத்த உள்ள பாதயாத்திரையை சீர்குலைக்கும் நோக்கோடு சதி திட்டங்கள் செயல்படுத்த முயற்சிகள் நடைபெறுகிறது.  ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி தெலுங்கு தேச கட்சியை நிர்வாகிகள் மீதும் அதன் தலைவர்களின் மீதும் மிரட்டும் விடுத்து வருவது கண்டிக்கத்தக்கது. சம்பந்தப்பட்ட ஒய் எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி நிர்வாகி கைது செய்ய வேண்டும் என்று புகார் அளிக்கப்பட்டுள்ளது என்று கூறினார்….

The post தெலுங்கு தேசம் கட்சி தலைவர் குறித்து தரக்குறைவாக பேசிய ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் நிர்வாகி-திருப்பதி போலீஸ் நிலையத்தில் புகார் appeared first on Dinakaran.

Tags : YSR Congress ,Telugu Desam Party ,Tirupati Police Station ,Tirupati ,YSR Congress party ,TDP ,
× RELATED விவசாயி டிராக்டரை எரித்த தெலுங்கு தேசம் கட்சியினர்