அம்பத்தூர்: கொரட்டூர், சிவசக்தி நகர் முதல் தெருவை சேர்ந்தவர் அர்ஜூன் பாலகிருஷ்ணன் (54), தொழிலதிபரான இவர், மனைவியை பிரிந்து தனியாக வாழ்ந்து வந்தார். தொழில் வளர்ச்சிக்காக தனியார் வங்கியில் ரூ.1 கோடி வரை இவர் கடன் பெற்றதாக கூறப்படுகிறது. ஆனால், பல ஆண்டுகளாக கடனை திரும்பிச் செலுத்தாததால் வங்கி அதிகாரிகள் வீட்டை ஜப்தி செய்து சீல் வைத்தனர். இதனால் மன உளைச்சலில் இருந்த பாலகிருஷ்ணன், அம்பத்தூர் தொழிற்பேட்டையில் உள்ள அவரது அலுவலகத்தில் நேற்று முன்தினம் இரவு தங்கியுள்ளார். பாலகிருஷ்ணனின் நண்பர்கள் நேற்று காலை அலுவலகம் வந்தபோது, கதவு உள்பக்கமாக தாழிட்டு இருந்தது. நீண்ட நேரம் தட்டியும் கதவை திறக்கவில்லை. இதனால், கதவை உடைத்து உள்ளே சென்றபோது அர்ஜூன் பாலகிருஷ்ணன் விஷ குடித்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. தகவலறிந்த அம்பத்தூர் தொழிற்போட்டை போலீசார், அர்ஜூன் பாலகிருஷ்ணன் உடலை கைப்பற்றி பிரத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். மேலும் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்….
The post கடன் தொல்லையால் தொழிலதிபர் தற்கொலை appeared first on Dinakaran.