×

வெளிநாட்டு டூர் ரத்து செய்த ஹீரோ, ஹீரோயின்கள்

கொரோனா வைரஸ் பீதி காரணமாக கோடை விடுமுறையை கொண்டாட வெளிநாடுகளுக்கு செல்ல இருந்த ஹீரோக்கள் தங்களது பயணத்தை ரத்து செய்துள்ளனர். ஆண்டுதோறும் கோடை விடுமுறையை கொண்டாட கோலிவுட்டில் இருக்கும் ஹீரோ, ஹீரோயின்கள் தங்கள் குடும்பத்துடன் அல்லது நண்பர்களுடன் வெளிநாடுகளுக்கு டூர் செல்வார்கள். அதுபோல் இந்த முறையும் டூர் செல்ல அவர்கள் திட்டமிட்டிருந்தனர். உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பீதி நிலவுவதால் வெளிமாநிலங்கள், வெளிநாடுகளுக்கு செல்வதை தவிர்க்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதனால் வெளிநாட்டு பயண திட்டத்தை திரையுலகினர் ரத்து செய்துவிட்டனர். வலிமை படத்தில் நடித்து வரும் அஜித், அடுத்த மாதம் வரை ஷூட்டிங்கில் கலந்துகொண்டு, மே மாதத்தில் 10 நாட்களுக்கு குடும்பத்தாருடன் வெளிநாடு செல்ல திட்டமிட்டிருந்தார். அந்த பயணத்தை அவர் ரத்து செய்துள்ளார். தனது ஒவ்வொரு படத்தின் படப்பிடிப்பும் முடிந்த பிறகு குடும்பத்தாருடன் மாமியார் வீடு இருக்கும் லண்டனுக்கு சென்று, அங்கிருந்து வேறு நாட்டுக்கு செல்வது விஜய்யின் வழக்கம்.

இப்போது மாஸ்டர் படத்தை அவர் முடித்துவிட்டார். இதையடுத்து வெளிநாடுக்கு செல்ல அவர் திட்டமிட்டிருந்தார். இப்போது அந்த திட்டத்தை கைவிட்டுள்ளார். இதேபோல் கோடையில் வெளிநாட்டுக்கு குடும்பத்துடன் செல்லும் சூர்யாவும் பயணத்தை கைவிட்டிருக்கிறார். நடிகை திரிஷா, தனது தோழிகளுடன் ஏதேனும் ஒரு நாட்டுக்கு சென்று ஒரு மாதம் தங்குவார்.

அவரும் இந்த பயண திட்டத்தை ஒத்திவைத்துவிட்டார். காதலர் விக்னேஷ் சிவனுடன் அடிக்கடி அமெரிக்கா அல்லது பிரான்ஸ் பறக்கும் நயன்தாராவும் இம்முறை எங்கும் செல்லவில்லை. தனது மாநிலமான கேரளாவுக்கும் செல்வதை அவர் தவிர்த்திருக்கிறார். குடும்பத்துடன் குஷ்புவும் வெளிநாடுக்கு செல்வார். அவரும் இம்முறை எங்கும் போவதில்லை என முடிவு செய்துள்ளார். மேலும் பல நடிகர், நடிகைகள், கோடை விடுமுறையில் வீட்டிலேயே இருக்க முடிவு செய்திருக்கிறார்கள்.

Tags : Heroines ,tour ,
× RELATED விஜய்யின் கோட் டில் இணைந்த திரிஷா