×

இனவெறி பேராசைக்கு மன்னிப்பு கிடையாது; ஸ்ருதிஹாசன் திடீர் பாய்ச்சல்

கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்ட நிலையில் உலகம் முழுவதும் மக்களிடம் அச்சம் பரவி வருகிறது. எல்லைகள் மூடப்பட்டு பரிசோதனைகள் நடத்தப்படு கிறது. இந்த நிலைமை குறித்து கவலை தெரிவித்திருக்கும் நடிகை ஸ்ருதிஹாசன் இனவெறி, பேராசைக்கு எதிராக திடீர் பாய்ச்சல் பாய்ந்திருக்கிறார்.

அவர் கூறும்போது,’கொரோனாவால் ஒவ்வொருவரும் அச்சத்தில் இருக்கிறார்கள். எல்லா இடங்களிலும் பயம் பரவியிருக்கிறது. நமது ஆரோக்கியத்துக்கு மிரட்டல் இருப்பது உண்மை. ஒவ்வொருவரும் சுத்தமாகவும், விழிப்போடும் இருக்க வேண்டும். ஆனால் கெட்ட எண்ணம், இனவெறி, பேராசை நடத்தை போன்ற வற்றுக்கு என்றைக்கும் மன்னிப்பு கிடையாது.
 
ஒவ்வொருவருக்கும் இது முயற்சிக்கான நேரம். தயவுசெய்து கனிவாக இருங்கள். மனித இனமே அச்சத்தில் இருக்கிறது. இதுதான் நாம் கூடுதலான பணி நேரத்தை காட்டுவதற்கான அழகான, அன்பான தருணம். தொற்றுநோய் விரைவில் முடிவடையும் என நம்புவோம். இவ்வாறு ஸ்ருதி கூறியிருக்கிறார்.

Tags : leap ,Sruthihasan ,
× RELATED இன்று ‘லீப்’ தினம்: டூடுல் வெளியிட்டு கொண்டாடிய கூகுள்