×

வாரிசு வேலைக்காக தந்தையை கொன்ற மகன் கைது

கொடைக்கானல்: கொடைக்கானலில் வாரிசு வேலைக்காக குடிபோதையில் மகனே, தந்தையை அடித்து கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் காமராஜர் சாலையை சேர்ந்தவர் நடராஜன் (55). கொடைக்கானல் நகராட்சி தூய்மை பணியாளர். இவரது மகன் தினேஷ் (27). இவருக்கு சில மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. அதன்பின் தினேஷ் ஒழுங்காக வேலைக்கு செல்லாமல், மது குடித்து விட்டு வந்து தாய், தந்தையை அவ்வப்போது அடித்து துன்புறுத்தி வந்ததாக கூறப்படுகிறது. கடந்த நவ. 16ம் தேதி இரவு வேலை முடிந்து நடராஜன் வீட்டுக்கு சென்றுள்ளார். அப்போது நடராஜனுக்கும், வீட்டில் இருந்த மகன் தினேஷ்க்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. குடிபோதையில் இருந்த தினேஷ், தந்தை நடராஜனை சரமாரியாக தாக்கியுள்ளார். இதில் மயங்கி விழுந்த நடராஜன் மீது மீண்டும் தினேஷ் தாக்கியதாக கூறப்படுகிறது. சத்தம் கேட்டு வந்த அக்கம்பக்கத்தினர் காயமடைந்த நடராஜனை மீட்டு, சிகிச்சைக்காக கொடைக்கானல் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் அவர் மேல்சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் நடராஜன் உயிரிழந்தார். இதுகுறித்து நடராஜனின் மகள் ெஜயலட்சுமி அளித்த புகாரில் கொடைக்கானல் போலீசார், தினேஷை கைது செய்தனர். வேலையின்றி இருந்த தினேஷ் தனது தந்தையை கொலை செய்து விட்டு, அரசின் வாரிசு வேலையை பெற்றுக் கொள்ளும் நோக்குடன் நடராஜனை தாக்கியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்….

The post வாரிசு வேலைக்காக தந்தையை கொன்ற மகன் கைது appeared first on Dinakaran.

Tags : Kodakianal ,Dindukal District, Kodicanal ,
× RELATED வாகன ஓட்டுனர்கள், சுற்றுலா பயணிகள்...