தண்டையார்பேட்டை: புதுவண்ணாரப்பேட்டை இந்திரா காந்தி நகர் 7வது தெருவை சேர்ந்தவர் சோமசுந்தரம் (47). இவர் அங்குள்ள டி.எச். ரோட்டில் டீக் கடை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இரவு கடையை மூடிவிட்டு சென்றுள்ளார். நேற்று காலை கடையை திறக்க வந்தார். அப்போது கடையின் ஷட்டர் பூட்டு உடைக்கப்பட்டிருப்பது பார்த்து அதிர்ச்சி அடைந்தார். உள்ளே கல்லாப்பெட்டியில் இருந்த ரூ.3000 ரொக்கம் மற்றும் சிகரெட் பாக்கெட்டுகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றிருப்பது தெரியவந்தது. இதுகுறித்து சோமசுந்தரம் கொடுத்த புகாரின்படி, தண்டையார்பேட்டை போலீசார் வழக்குபதிவு செய்து விசாரிக்கின்றனர்….
The post டீக்கடையில் கொள்ளை appeared first on Dinakaran.