×

சம்பள பணத்தை தராததால் ஆத்திரம் பெயின்டர் மண்டையை உடைத்த நண்பன் கைது

சென்னை: சம்பள பணத்தை தராததால் பெயின்டர் மண்டையை உடைத்த நண்பனை போலீசார் கைது செய்தனர். சென்னை சூளை பள்ளம்  அஞ்சுகம் தெருவை சேர்ந்தவர் குமார் (45). பெயின்டரான இவர், தனது நண்பரான சுரேஷ்குமார் (எ) சுறா (25) என்பவருடன் இணைந்து பெயின்ட் வேலை ெசய்து வந்தார். அதன்படி இருவரும் ஒரு வீட்டில் பெயின்ட் அடித்துள்ளனர். இதற்கான சம்பள பணத்தை குமார் வாங்கி வைத்துள்ளார்.குமார்  நேற்று முன்தினம் சூளைபள்ளம் நாகத்தம்மன் கோயில் அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது, அங்கு வந்த சுரேஷ்குமார், வேலை செய்ததற்கான சம்பள பணத்தை குமாரிடம் கேட்டுள்ளார். அதற்கு குமார் உனது சம்பள பணத்தை வாங்கி செலவு செய்துவிட்டேன். பிறகு தருகிறேன், என்று கூறியுள்ளார். இதனால் இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த சுரேஷ்குமார் சாலையோரம் இருந்த உருட்டுக்கட்டையை எடுத்து குமாரை தலை உள்ளிட்ட இடங்களில் பலமாக தாக்கி விட்டு தப்பினார். இதில் குமாருக்கு மண்டை உடைந்து ரத்த கொட்டியது. உடனே அருகில் இருந்தவர்கள் குமாரை மீட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் குமார் அளித்த புகாரின் படி ரவுடியான சுரேஷ்குமாரை போலீசார் ேநற்று கைது செய்தனர். சுரேஷ் குமார் மீது 3 அடிதடி வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது….

The post சம்பள பணத்தை தராததால் ஆத்திரம் பெயின்டர் மண்டையை உடைத்த நண்பன் கைது appeared first on Dinakaran.

Tags : Atraram Painter ,CHENNAI ,Chennai Kiln Pit Anjukam… ,Dinakaran ,
× RELATED சென்னை கோயம்பேடு மேம்பாலத்தில் ஆண்...