×

மக்காச்சோள பயிரில் அமெரிக்கன் படைப்புழு கட்டுப்படுத்துவது எப்படி?

*மடத்துக்குளம் வேளாண் உதவி இயக்குநர் விளக்கம்உடுமலை : திருப்பூர் மாவட்டம், மடத்துக்குளம் வட்டாரத்தில் ஆண்டுதோறும் சுமார் 2,400 ஹெக்டர் பரப்பளவில் மக்காச்சோளம் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. நடப்பு ராபி பருவத்தில் விவசாயிகள் சாகுபடி செய்துள்ள மக்காச்சோள பயிர் வளர்ச்சி பருவத்தில் உள்ளது. மடத்துக்குளம் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் ராஜேஸ்வரி வயலாய்வு மேற்கொண்டு மக்காச்சோள பயிரில் அமெரிக்கன் படைப்புழு தாக்குதலை கட்டுப்படுத்த விவசாயிகளுக்குத் தேவையான தொழில்நுட்பங்களை வழங்கினார். சங்கராம நல்லூர் கிராமத்தில் மக்காச்சோள வயலில் வேளாண்மை துறையினர்  ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, மடத்துக்குளம் வட்டார துணை வேளாண்மை அலுவலர்  ரவிச்சந்திரன், உதவி வேளாண்மை அலுவலர் சுந்தரம் ஆகியோர் உடன் இருந்தனர்.இதையடுத்து, மடத்துக்குளம் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் ராஜேஸ்வரி கூறியதாவது: மக்காச்சோள பயிரில் இலைகளை சேதப்படுத்தும் படைப்புழுகள் 6 நிலைகளை கொண்டுள்ளது. இளம் பருவம் கருப்பு நிற தலையுடன், பச்சை நிறத்தில் காணப்படுகிறது. 3வது பருவத்தில் பழுப்பு நிறத்திலும், ஒரங்களில் வௌ்ளை நிறக்கோடுகள் தோன்ற ஆரம்பிக்கும், புழுவின் 4 முதல் 6 நிலையில் தலை செம்பழுப்பாக வெண்ணிற கோடுகள் உடலின் ஓரத்தில், மேற்புறத்தில் காணப்படும். 6ம் நிலையில் உள்ள புழுவின் தலைப்பகுதியில் வெண்ணிற கோடுகள் காணப்படும். இந்த கோடுகள் மற்ற படைப்புழுக்களில் இருந்து இவற்றை வேறுபடுத்தி காண உதவுகிறது. மேலும், புழுவின் உடம்பில் இறுதிப்பகுதியில் சதுர வடிவில் தோன்றும் வெண்ணிற புள்ளிகள் இதனை எளிதில் கண்டறிய உதவும், புழுக்கள் இலையின் அடியில் சுரண்ட ஆரம்பிக்கும், இளம் புழுக்கள் மெல்லிய நூல் இலைகளை உமிழ் நீரால் பின்னி ஒரு செடியிலிருந்து அடுத்த மக்காச்சோள பயிருக்கு சென்றடைய வழிவகுக்கும். இளம் பயிர்களில் இலை பருவத்திலும், வளர்ந்த பயிரில் கதிர் பிடிக்கும் தருணத்திலும் சுரண்டி, உண்ண ஆரம்பிக்கும். இரவு நேரத்தில் புழுக்கள் அதிக சேதத்தை ஏற்படுத்தும். படைப்புழுக்கள் மைய குருத்தை (உச்சி சுருள் இலை) மென்று சேதப்படுத்தும். இலைகள் ஆங்காங்கே கிழிந்து காணப்படும். 8 முதல் 14 நாட்கள் வயது உடைய புழுக்கள் அதிக சேதத்தை ஏற்படுத்தும்.ஒருங்கிணைந்த விதைப்புடன் ஒரே நேரத்தில் விதைப்பு செய்வதால் மக்காச்சோள படைப்புழுக்களை கட்டுப்படுத்தலாம். தற்போது, படைப்புழுவின் சேதார அளவு நடமாட்டம், பாதுகாப்பு நடவடிக்கை செலவு, மக்காச்சோள விலை ஆகியவற்றை கணக்கிட்டு பொருளாதார சேத நிலை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் மூலம் முடிவு செய்யப்பட்டு உயிரியல் பூச்சிக்கொல்லிகள் மற்றும் ரசாயன பூச்சிகொல்லிகள் பரிந்துரை செய்யப்படுகின்றன. இவ்வாறு பரிந்துரை செய்யப்படும் பூச்சிக்கொல்லிகளை கைத்தெளிப்பான் அல்லது பேட்டரி தெளிப்பான் உபயோகித்து கட்டுப்படுத்தலாம். இவ்வாறு அவர் கூறினார்.தடுப்பு முறைகள்மக்காச்சோள பயிரில் தாய் அந்துப்பூச்சி மாலை நேரத்தில் மிகவும் வேகமாக  இயங்கும். முதல் 4-5 நாட்கள் முட்டைகள் இடும். இன கவர்ச்சி பொறிகளை  ஏக்கருக்கு 20 என்ற அளவில் பயன்படுத்தி ஆண் அந்துப்பூச்சிகளை கவர்ந்து  அழிக்கலாம். கடைசி உழவின் போது 100 கிலோ வேப்பம் பிண்ணாக்கு இட்டு மண்ணில்  உள்ள கூட்டுப்புழுக்களை அழிக்கலாம். அசாடிராக்டின் 2 சதம் வேப்ப எண்ணெய்யை 2  மிலி ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிப்பதன் மூலம் தாய் அந்துபூச்சிகள்  பயிரில் முட்டைகள் இடுவதை தவிர்க்க முடியும். மேலும் 150 கிலோ  வேப்பம் பிண்ணாக்கு இட்டு மண்ணில் உள்ள கூட்டுப்புழுக்களை அழிக்கலாம்….

The post மக்காச்சோள பயிரில் அமெரிக்கன் படைப்புழு கட்டுப்படுத்துவது எப்படி? appeared first on Dinakaran.

Tags : Madathikulam ,Udumalai ,Tirupur district ,
× RELATED உடுமலையில் கொளுத்தும் வெயில் குளிர்பானங்கள் விற்பனை ஜோர்