×

மஞ்சள் காமாலைக்கு நாட்டு மருந்து சாப்பிட்ட சிறுவன் சாவு; சந்தேகம் இருப்பதாக பெற்றோர் புகார்

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் வானூர் அருகே மஞ்சள் காமாலைக்கு நாட்டு மருந்து சாப்பிட்ட சிறுவன் உயிரிழந்தான். அவனது மரணத்தில் சந்தேகம் இருப்பதாக காவல்நிலையத்தில் பெற்றோர் புகார் அளித்தனர். விழுப்புரம் மாவட்டம் வானூர் அருகே தைலாபுரம் காந்தி நகரை சேர்ந்தவர் சக்தி. இவரது மகன் ரோகித் (10), தைலாபுரத்தில் உள்ள அரசு ஆதிதிராவிடர் நல ஆரம்பப்பள்ளியில் 5ம் வகுப்பு படித்து வந்தான். கடந்த சில நாட்களாக திடீரென சிறுவனின் உடல்நிலை பாதிக்கப்பட்டது. பின்னர் மஞ்சள் காமாலை என்று தெரிய வந்ததும், அவனது பெற்றோர் கடந்த 19ம் தேதி விழுப்புரம் அருகே உள்ள கெங்கராம்பாளையத்தில் காந்திமதி என்பவரிடம் நாட்டு மருந்து வாங்கி கொடுத்துள்ளனர். காலை 8 மணிக்கு நாட்டு மருந்து சாப்பிட்டுவிட்டு வீட்டுக்கு சென்ற சிறுவனுக்கு வயிற்றுவலி ஏற்பட்டுள்ளது. பின்னர் புதுச்சேரி கதிர்காமம் அரசு குழந்தைகள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டான். அன்றிரவு சிறுவன் உயிரிழந்துள்ளான். இதனிடையே, நாட்டு மருந்து சாப்பிட்டதால்தான் சிறுவன் உயிரிழந்திருப்பதாகவும், சாவில் சந்தேகம் இருப்பதாகவும் வளவனூர் காவல்நிலையத்தில் அவனது பெற்றோர் புகார் செய்தனர். போலீசார் சந்தேக மரணம் என்ற பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்….

The post மஞ்சள் காமாலைக்கு நாட்டு மருந்து சாப்பிட்ட சிறுவன் சாவு; சந்தேகம் இருப்பதாக பெற்றோர் புகார் appeared first on Dinakaran.

Tags : Sawu ,Viluppuram ,Viluppuram district ,Vanur ,
× RELATED விழுப்புரம் நாடாளுமன்ற தொகுதி வாக்கு...