×

பைத்தியக்காரத்தனமான காதல் விவகாரத்தால் ‘பிஎச்டி’ மாணவி மீது பெட்ரோல் ஊற்றி தீவைப்பு; சக மாணவனும் தீயில் கருகிய பயங்கரம்

அவுரங்காபாத்: அவுரங்காபாத்தில் காதல் விவகாரத்தால் பிஎச்டி மாணவி மீது ெபட்ரோல் ஊற்றி தீவைத்த சக மாணவன், தானும் தீவைத்துக் கொண்ட பயங்கர சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் அவுரங்காபாத்தில் உள்ள டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர் பல்கலைகழகத்தில் பிஎச்டி படிப்பு படித்து வரும் மாணவி ஒருவர்,  ஹனுமான் தெக்டி பகுதியில் உள்ள தடய அறிவியல் கல்லூரி ஆய்வகத்தில் ப்ராஜெக்ட் செய்து கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த பிஎச்டி மாணவன் ஒருவன், திடீரென மாணவியின் உடலில் பெட்ரோல் ஊற்றினான். பின்னர் தனது உடலிலும் பெட்ேராலை ஊற்றிக் கொண்டான். மாணவி மற்றும் தனது உடலிலும் தீயை பற்றவைத்தான். இந்த சம்பவத்தில் இருவருக்கும் பலத்த தீக்காயம் ஏற்பட்டது. அங்கிருந்தவர்கள் இருவரையும் மீட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மாணவிக்கு 30 முதல் 40 சதவீத தீக்காயங்களும், மாணவனுக்கு 80 முதல் 90 சதவீத தீக்காயங்களும் ஏற்பட்டுள்ளன. கல்லூரி ஆய்வகத்தில் நடந்த இந்த சம்பவம், பெரும் பதற்றத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது. இச்சம்பவம் குறித்து போலீசார் கூறுகையில், ‘குற்றம் சாட்டப்பட்ட மாணவனின் பெயர் கஜனன் குஷால்ராவ் முண்டே என்பது தெரியவந்துள்ளது. நீதித்துறை நடுவர் இருவரிடம் வாக்குமூலம் பெற்றுள்ளார். இச்சம்பவத்திற்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை. காதல் விவகாரம் காரணமாக இருக்க வாய்ப்புள்ளது. போலீஸ் தரப்பிலும் இருவரிடமும் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது. தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறோம்’ என்றார். …

The post பைத்தியக்காரத்தனமான காதல் விவகாரத்தால் ‘பிஎச்டி’ மாணவி மீது பெட்ரோல் ஊற்றி தீவைப்பு; சக மாணவனும் தீயில் கருகிய பயங்கரம் appeared first on Dinakaran.

Tags : Aurangabad ,
× RELATED பிபிசி தலைவராக இந்தியர் நியமனம்