×

நாயை அடித்து கொன்ற மாணவர்கள் மீது வழக்கு: கதி கலங்க வைக்கும் வீடியோ

புதுடெல்லி: டெல்லியில் டான் போஸ்கோ தொழில்நுட்பக் கழகத்தை சேர்ந்த சுமார் 25 மாணவர்கள் மற்றும் பணியாளர்கள் இணைந்து கர்ப்பமாக இருந்த நாயை அடித்து கொன்றுள்ளனர். இது குறித்த வீடியோ சமூக வலைளத்தளங்களில் வைரல் ஆனது. இன்ஸ்டிடியூட் வளாகத்தில் உள்ள ஒரு தகர கொட்டகைக்குள் மாணவர்கள் கையில் தடியுடன் உள்ளே சென்று அந்த நாயை சித்ரவதை செய்து கொல்லும் வீடியோ பார்ப்போரை கலங்க வைத்தது. இது குறித்து நடவடிக்கை எடுக்கக்கோரி விலங்கு ஆர்வலர்கள் குரல் கொடுத்தனர். இதையடுத்து, நியூ பிரண்ட்ஸ் காலனி போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு காசியாபாத்தில் 3 பேர் சேர்ந்து நாயை தூக்கிட்டு கொன்ற சம்பவத்தை தொடர்ந்து இந்த சம்பவம் நடந்துள்ளது….

The post நாயை அடித்து கொன்ற மாணவர்கள் மீது வழக்கு: கதி கலங்க வைக்கும் வீடியோ appeared first on Dinakaran.

Tags : New Delhi ,Don Bosco Institute of Technology ,Delhi ,
× RELATED மனைவியின் சீதனம் கணவருக்கு உரிமையில்லை: உச்சநீதிமன்றம் உத்தரவு