×

மாநகராட்சியில் 5 அடி பாம்பு பிடிபட்டது

சென்னை: ஆவடி மாநகராட்சியல் 5 அடி நீளமுள்ள பாம்பு பிடிப்பட்டது.  ஆவடி காமராஜர் நகர் நான்காவது தெருவை சேர்ந்தவர் லோகநாதன் (45). வக்கீல். இந்நிலையில், மாலை அவர் குடும்பத்துடன் வீட்டில் அமர்ந்து  பேசிக் கொண்டிருந்தார். அப்போது, இவரது வீட்டில் 5 அடி நீளமுள்ள நல்ல பாம்பு ஒன்று புகுந்தது. இதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனே, செய்வது அறியாமல் திகைத்துப் போனவர். உடனே, விலங்கின ஆர்வலரும் பாம்பு பிடி வல்லுனருமான ஆவடி பகுதியை சேர்ந்த ரீகன் (35) என்பவருக்கு தகவல் தெரிவித்தார். அதன் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த விலங்கின ஆர்வலர் வீட்டில் பதுங்கி இருந்த வயது முதிர்ந்த நல்ல பாம்பை அவர் கொண்டு வந்த  கருவி மூலம் லாவகமாக பிடித்து, வனப்பகுதிக்கு கொண்டு சென்று விடப்பட்டது….

The post மாநகராட்சியில் 5 அடி பாம்பு பிடிபட்டது appeared first on Dinakaran.

Tags : Chennai ,Awadi Corporation ,Awadi ,Kamarajar Nagar ,Fourth Street Loganathan ,Dinakaran ,
× RELATED சென்னை ஆவடியில், மதுபோதையில் காவலரை தாக்க முயன்ற இளைஞர்